Search This Blog

Monday, March 28, 2011

மாவு, சட்னி அரைக்க நேரமில்லாததால் மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட உள்ளது: கனிமொழி

பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்கள் சுய தொழில் செய்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். மாவு அரைக்கவும், சட்னி அரைக்கவும் அவர்களுக்கு நேரம் இல்லை என்பதால் மிக்சி, கிரைண்டர் தருவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்,'' என்று கனிமொழி எம்.பி., கூறினார்.

நாகை தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது ஷேக் தாவூதுக்கு ஆதரவாக நேற்று நாகூரில் பிரசாரம் செய்த கனிமொழி பேசியதாவது; கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர் மு.கருணாநிதி. கடந்த தேர்தலில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருவோம், இலவச கலர் "டிவி' தருவோம் என்று நாங்கள் சொன்னதை யாரும் நம்பவில்லை. ஆனால்,ஒரு கிலோ அரிசி,ஒரு ரூபாய்க்கு கொடுத்தோம். இலவச கலர் "டிவி' 80 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் சொல்லாத "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' மூலம் தமிழகத்தில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, சுழல் நிதியை நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தி, அதில் இரண்டு லட்சம் ரூபாய் மானியம் என்று அறிவித்தது முதல்வர் கருணாநிதி தான்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்கள் சுய தொழில் செய்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். மாவு அரைக்கவும், சட்னி அரைக்கவும் அவர்களுக்கு நேரம் இல்லை என்பதால் மிக்சி, கிரைண்டர் தருவதாக கலைஞர் அறிவித்துள்ளார். காப்பீட்டு திட்டம்,"108' ஆம்புலன்ஸ் என்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை இந்தியாவிலேயே முன்னுதாரண மாநிலமாக மாற்றி காட்டியவர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலர் தேர்தல் அறிக்கையில் ஆடு,மாடு தருவதாக கூறுகிறார்கள். அவர்களின் பொய்யான வாக்குறுதியை, மக்கள் நம்பத் தயாராக இல்லை. நான்கு ஆடுகளை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் சொல்வதோடு சரி, எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி., பேசினார்

No comments: