Search This Blog

Thursday, September 30, 2010

அயோத்தி தீர்ப்பு ராமர் சிலை இருக்கும் இடம் இந்துக்களுக்கு சொந்தம் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 ஆக பிரித்து, 2 இந்து அமைப்புகளுக்கும், ஒரு முஸ்லிம் அமைப்புக்கும் சமமாக வழங்க வேண்டும்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பகுதிகளாக பிரித்து, 2 இந்து அமைப்பு களுக்கும் ஒரு முஸ்லிம் அமைப்புக்கும் வழங்க வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

லக்னோ, அக்.1-

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 2.7 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

இடைக்கால தடை

இந்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் விசாரித்து வந்தது. ராம்லல்லா விராஜ்மன் ஸ்தல், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளும், கோபால்சிங் விஷாரத் என்பவரும் இந்த வழக்கை தொடுத்தவர்கள் ஆவர். நீதிபதிகள் சுதிர் அகர்வால், எஸ்.யு.கான், டி.வி.சர்மா ஆகியோர் இவ்வழக்கில் கடந்த 24-ந் தேதி தீர்ப்பு அளிக்க இருந்தனர்.

ஆனால், பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணும் வகையில், தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்று, தீர்ப்பு அளிக்க ஒரு வார கால இடைக்கால தடை விதித்து கடந்த 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பின்னர், அந்த இடைக்கால தடையை, கடந்த 28-ந் தேதி, தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் நீக்கியது.

பரபரப்பு தீர்ப்பு

இதையடுத்து, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மூன்று நீதிபதிகளும் தனித்தனி தீர்ப்புகளை அளித்தனர்.

இருப்பினும், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை அமைந்துள்ள பகுதிதான், ராமர் பிறந்த இடம் என்பதில் 3 நீதிபதிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்தனர். அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அவர்கள் கூறினர்.

நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று கூறிய சன்னி வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதி எஸ்.யு.கான், வக்பு வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தார்.

3 பங்காக பிரிப்பு

சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம், 3 சம பங்குகளாக பிரிக்கப்பட்டு, ராம்லல்லா விராஜ்மனுக்கும், சன்னி வக்பு வாரியத்துக்கும், நிர்மோகி அகாராவுக்கும் தலா ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் சுதிர் அகர்வாலும், எஸ்.யு.கானும் தீர்ப்பு அளித்தனர்.

நிலத்தை பங்கிடும் போது, சிறு சிறு `அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ள வேண்டும் என்றும், நிலம் குறைவாக கிடைத்தவருக்கு, சர்ச்சைக்குரிய நிலத்தை ஒட்டி மத்திய அரசு கையகப்படுத்தி உள்ள நிலத்தில், நிலம் ஒதுக்கி சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். யார் யாருக்கு எந்த நிலத்தை அளிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் விளக்கினர்.

நிலத்தை பிரிக்கும் பணி, 3 மாதங்களுக்கு பிறகு தொடங்க வேண்டும் என்றும், அதுவரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். ராமர், சீதை சிலைகளை தற்போது உள்ள இடத்தில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் கூறினர்.

நீதிபதி சுதிர் அகர்வால்

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய கட்டிடம், பாபரல் 1528-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதை முஸ்லிம் தரப்பினர் நிரூபிக்க தவறி விட்டனர். அக்கட்டிடத்தின் மையத்தில் உள்ள வட்டவடிவ கூரையின் அடியில் ராமர் சிலை உள்ள இடம், ராமர் பிறந்த இடமாக இந்துக்களால் நம்பப்படுகிறது. அந்த இடத்தில், பிரதிவாதிகள் எந்தவிதத்திலும் தலையிடக்கூடாது, ஊறு விளைவிக்கக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.

உள் முற்றத்தில் உள்ள பகுதி, இந்துக்களும், முஸ்லிம்களும் நீண்ட நெடுங்காலமாக பயன்படுத்தி வந்ததால், அது இருதரப்பினருக்குமே சொந்தமானது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரித்து, இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், நிர்மோகி அகாரா அமைப்புக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.

யாருக்கு எந்த இடம்?

இந்துக்களுக்கு அளிக்கப்படும் பங்கில், தற்போது ராமர் சிலை அமைந்துள்ள இடம் இருக்க வேண்டும். வெளி முற்றத்தில் உள்ள ராம் சாபுத்ரா, சீதா ரசோய், பாந்தர் ஆகிய பகுதிகள், நிர்மோகி அகாரா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும். வெளி முற்றத்தில் உள்ள திறந்தவெளிப் பகுதியை இந்துக்கள் பல ஆண்டுகளாக தங்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்தி வந்ததால், அப்பகுதியை நிர்மோகி அகாரா அமைப்புக்கும், இந்துக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.

அதே சமயத்தில், முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் நிலம், மொத்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக இருக்கக்கூடாது. தேவைப்பட்டால், வெளி முற்றத்தில் இருந்து சிறிது நிலத்தை அளிக்கலாம்.

இவ்வாறு நீதிபதி சுதிர் அகர்வால் கூறியுள்ளார்.

நீதிபதி எஸ்.யு.கான்

நீதிபதி எஸ்.யு.கான் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய கட்டிடம், பாபராலோ அல்லது அவரது உத்தரவின்பேரிலோ மசூதியாக கட்டப்பட்டது. ஆனால், பாபருக்கோ அல்லது அதை கட்டியவருக்கோ அந்த மசூதி சொந்தமானது என்று நேரடி ஆதாரம் மூலம் நிரூபிக்கப்படவில்லை. அந்த மசூதியைக் கட்ட எந்த இந்து கோவிலும் இடிக்கப்படவில்லை. நீண்ட காலமாக இடிந்து கிடந்த கோவில் இடிபாடுகளின் மீதுதான் அந்த மசூதி கட்டப்பட்டது.

இந்துக்கள், முஸ்லிம்கள், நிர்மோகி அகாரா அமைப்பு ஆகிய மூன்று தரப்பினரும், சர்ச்சைக்குரிய நிலத்தின் கூட்டு உரிமையாளர்கள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அந்த நிலம் மூன்று பங்காக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தற்காலிக உத்தரவாக பிறப்பிக்கப்படுகிறது. இருப்பினும், தற்போது ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம், இறுதி உத்தரவில், இந்துக்களுக்கு அளிக்கப்படும்.

வரைபடத்தில், ராம் சாபுத்ரா, சீதா ரசோய் என்ற வார்த்தைகளில் குறிக்கப்பட்டுள்ள இடங்கள், நிர்மோகி அகாரா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி எஸ்.யு.கான் கூறியுள்ளார்.

டி.வி.சர்மா

நீதிபதி டி.வி.சர்மா தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய இடம், ராமர் பிறந்த இடம் தான். ராமர், ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்படுகிறார். அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது. எந்த வருடம் என்பது நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தது. மசூதிக்கு உரிய அம்சங்களே அதில் இல்லை. அதனால் அதை மசூதியாக கருத முடியாது.

ஏற்கனவே அங்கிருந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டுத்தான் அந்த கட்டிடம் கட்டப்பட்டது. அந்த இடத்தில், பிரமாண்டமான இந்து கோவில் இருந்ததாக, தொல்பொருள் ஆய்வுத்துறை நிரூபித்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில், 1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி நள்ளிரவில் சிலைகள் வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அதை புனித ஸ்தலமாக கருதி, ஆன்மிக பயணம் சென்று வருகிறார்கள்.

வெளி முற்றப்பகுதி, இந்துக்களுக்கே முற்றிலும் சொந்தமானது என்றும், அவர்கள் அங்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் உள்ள உள்முற்றப்பகுதியிலும் அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

இவ்வாறு நீதிபதி டி.வி.சர்மா கூறியுள்ளார்.

--நன்றி தினதந்தி

அயோத்தி தீர்ப்பு அரசியல்தனமான தீர்ப்பு

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.


கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.


இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.
நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?
அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.


தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.


அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.


நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.
அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.
அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.


மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.


நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.


நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...
அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன..


----நன்றி தினமணி

Wednesday, September 29, 2010

அயோத்தி பாதுகாப்பு வளையத்தில் தீர்ப்பு கூறும் நீதிபதிகள்


லக்னெள: அயோத்தி நில விவகார வழக்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பை அறிவிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையின் 3 நீதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தான் இன்று இந்தத் தீர்ப்பை அளிக்கவுள்ளது.

இந்த தீர்ப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையின் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் கூடுதலாக மத்தியப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில், ஒரு எஸ்பி, 6 கூடுதல் எஸ்பிக்கள், 22 துணை எஸ்பிக்கள், 144 சப்-இன்ஸ்பெக்டர்கள், 104 ஏட்டுகள், 807 போலீஸார் மற்றும் 200 மத்திய கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீர்ப்பை வெளியிடவுள்ள நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிபதிகளின் வீடுகளுக்கு தலா 20 கமாண்டோ படையினர், 5 மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

மேலும் 3 நீதிபதிகளுக்கும் தனித்தனி பாதுகாப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகளின் கார்களுக்கு முன்பாக `பைலட்' கார்களும், பின்னால் `எஸ்கார்ட்' கார்களும் பாதுகாப்புக்காக செல்கின்றன.

தங்கபாலு கூட்டத்தில் சிதம்பரம் ஆதரவாளருக்கு தர்ம அடி

தேனியில் நடந்த காங்., கூட்டத்தில், அமைச்சர் சிதம்பரம் படத்தை நோட்டீஸ் மற்றும் போஸ்டரில் போடாததை கண்டித்து, கட்சித் தலைவர் தங்கபாலுவிடம் கேள்வி எழுப்பிய கம்பம் ஒன்றிய தலைவர் பால்பாண்டியனுக்கு தர்ம அடி விழுந்தது.
தேனி மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் நேற்று, மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஆருண் எம்.பி., மாவட்ட வர்த்தக காங்., தலைவர் சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க வந்த மாநில தலைவர் தங்கபாலுவை வரவேற்று, நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை எதிலும் மத்திய அமைச்சர் சிதம்பரம் படம் இடம் பெறவில்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் கூட்டம் துவங்கியதும், கம்பம் ஒன்றிய காங்., தலைவர் பால்பாண்டியன், மேடை ஏறி வந்து தங்கபாலுவிடம், "நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் வரவேற்பு போஸ்டர்கள், தட்டிகள் எதிலும் சிதம்பரம் படம் இடம்பெறவில்லை' என புகார் தெரிவித்தார். அவரை தங்கபாலு சமாதானம் செய்தாலும், தொடர்ந்து பால்பாண்டியன் வாக்குவாதம் செய்தபடி இருந்தார். இதனால், மேடை முன் இருந்த பலர், பால்பாண்டியனை கீழே இறங்கும்படி கூச்சல் எழுப்பினர். தங்கபாலுவும், கீழே இறங்குமாறு பால்பாண்டியனை சத்தம் போட்டார். உடனே, மேடையில் இருந்த காங்., நிர்வாகிகள், பால்பாண்டியனை கீழே தள்ளினர். கீழே இருந்த தொண்டர்கள் அவரை அடித்து, உதைத்து, ஏறி மிதித்தனர்.

இதனால் கோபமடைந்த தங்கபாலு, "அறைக்குள் பேசும் விஷயங்களை, மேடையில் பத்திரிகையாளர்கள் முன் பேசக்கூடாது. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக நடத்தும் இது போன்ற சம்பவங்களால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். காங்., கட்சியில் சோனியா, ராகுல் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் கிடையாது. தமிழகத்தில் நான், சிதம்பரம், வாசன், இளங்கோவன் உட்பட எல்லா தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். சிறு விஷயங்களை பெரிதுபடுத்தி, யாரும் தகராறு செய்ய வேண்டாம். சோனியா அக்., 9ல் வந்து சென்ற பின், 10ம் தேதி முதல் நான் கட்சியினரிடம் குறைகளை கேட்பேன். அப்போது எல்லா விஷயங்களையும் கூறுங்கள்' என்றார். 

Monday, September 27, 2010

Dr. APJ Abdul Kalam's Speech

I have three visions for India. In 3000 years of our history people from all over the world have come and invaded us, captured our lands, conquered our minds. From Alexander onwards. The Greeks, the Turks, the Moguls, the Portuguese, the British, the French, the Dutch, all of them came and looted us, took over what was ours. Yet we have not done this to any other nation. We have not conquered anyone. We have not grabbed their land, their culture, their history and tried to enforce our way of life on them. Why? Because we respect the freedom of others. That is why my first vision is that of FREEDOM. I believe that India got its first vision of this in 1857, when we started the war of independence. It is this freedom that we must protect and nurture and build on. If we are not free, no one will respect us.

My second vision for India is DEVELOPMENT. For fifty years we have been a developing nation. It is time we see ourselves as a developed nation. We are among top 5 nations of the world in terms of GDP. We have 10 percent growth rate in most areas. Our poverty levels are falling. Our achievements are being globally recognized today. Yet we lack the self-confidence to see ourselves as a developed nation, self-reliant and self-assured. Isn't this incorrect?

I have a THIRD vision. India must stand up to the world. Because I believe that unless India stands up to the world, no one will respect us. Only strength respects strength. We must be strong not only as a military power but also as an economic power. Both must go hand-in-hand. My good fortune was to have worked with three great minds. Dr. Vikram Sarabhai of the Dept. of space, Professor Satish Dhawan, who succeeded him and Dr. Brahm Prakash, father of nuclear material. I was lucky to have worked with all three of them closely and consider this the great opportunity of my life.


I see four milestones in my career: ONE: Twenty years I spent in ISRO. I was given the opportunity to be the project director for India's first satellite launch vehicle, SLV3. The one that launched Rohini. These years played a very important role in my life of Scientist.


TWO: After my ISRO years, I joined DRDO and got a chance to be the part of India's missile program. It was my second bliss when Agni met its mission requirements in 1994.


THREE: The Dept. of Atomic Energy and DRDO had this tremendous partnership in the recent nuclear tests, on May 11 and 13. This was the third bliss. The joy of participating with my team in these nuclear tests and proving to the world that India can make it, that we are no longer a developing nation but one of them. It made me feel very proud as an Indian. The fact that we have now developed for Agni a re-entry structure, for which we have developed this new material. A Very light material called carbon-carbon.

FOUR: One day an orthopedic surgeon from Nizam Institute of Medical Sciences visited my laboratory. He lifted the material and found it so light that he took me to his hospital and showed me his patients. There were these little girls and boys with heavy metallic calipers weighing over three kg. each, dragging their feet around. He said to me: Please remove the pain of my patients. In three weeks, we made these Floor reaction Orthosis 300 gram calipers and took them to the orthopedic centre. The children didn't believe their eyes. From dragging around a three kg. load on their legs, they could now move around! Their parents had tears in their eyes. That was my fourth bliss!


Why is the media here so negative? Why are we in India so embarrassed to recognize our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why? We are the first in milk production. We are number one in Remote sensing satellites. We are the second largest producer of wheat. We are the second largest producer of rice. Look at Dr. Sudarshan, he has transferred the tribal village into a self-sustaining, self-driving unit. There are millions of such achievements but our media is only obsessed in the bad news and failures and disasters.


I was in Tel Aviv once and I was reading the Israeli newspaper. It was the day after a lot of attacks and bombardments and deaths had taken place. The Hamas had struck. But the front page of the newspaper had the picture of a Jewish gentleman who in five years had transformed his desert land into an orchid and a granary. It was this inspiring picture that everyone woke up to. The gory details of killings, bombardments, deaths, were inside in the newspaper, buried among other news. In India we only read about death, sickness, terrorism, crime. Why are we so NEGATIVE? Another question: Why are we, as a nation so obsessed with foreign things? We want foreign TVs, we want foreign shirts. We want foreign technology. Why this obsession with everything imported. Do we not realize that self-respect comes with self-reliance?


I was in Hyderabad giving this lecture, when a 14 year old girl asked me for my autograph. I asked her what her goal in life is: She replied: I want to live in a developed India. For her, you and I will have to build this developed India. You must proclaim. India is not an under-developed nation; it is a highly developed nation.


Allow me to come back with vengeance. Got 10 minutes for your country?


YOU say that our government is inefficient. YOU say that our laws are too old. YOU say that the municipality does not pick up the garbage. YOU say that the phones don't work, the railways are a joke, the airline is the worst in the world, mails never reach their destination. YOU say that our country has been fed to the dogs and is the absolute pits. YOU say, say and say.
What do YOU do about it? Take a person on his way to Singapore. Give him a name - YOURS. Give him a face - YOURS. YOU walk out of the airport and you are at your International best. In Singapore you don't throw cigarette butts on the roads or eat in the stores. YOU are as proud of their Underground Links as they are. You pay $5 (approx. Rs. 60) to drive through Orchard Road (equivalent of Mahim Causeway or Pedder Road) between 5 PM and 8 PM.
YOU comeback to the parking lot to punch your parking ticket if you have over stayed in a restaurant or a shopping mall irrespective of your status identity. In Singapore you don't say anything, DO YOU? YOU wouldn't dare to eat in public during Ramadan, in Dubai. YOU would not dare to go out without your head covered in Jeddah. YOU would not dare to buy an employee of the telephone exchange in London at 10 pounds (Rs. 650) a month to, "see to it that my STD and ISD calls are billed to someone else." YOU would not dare to speed beyond 55 mph (88 kph) in Washington and then tell the traffic cop, "Jaanta hai sala main kaun hoon (Do you know who I am?). I am so and so's son. Take your two bucks and get lost." YOU wouldn't chuck an empty coconut shell anywhere other than the garbage pail on the beaches in Australia and New Zealand. Why don't YOU spit Paan on the streets of Tokyo? Why don't YOU use examination jockeys or buy fake certificates in Boston? We are still talking of the same YOU. YOU who can respect and conform to a foreign system in other countries but cannot in your own. You who will throw papers and cigarettes on the road the moment you touch Indian ground. If you can be an involved and appreciative citizen in an alien country why cannot you be the same here in India. Once in an interview, the famous Ex-municipal commissioner of Bombay Mr.Tinaikar had a point to make. "Rich people's dogs are walked on the streets to leave their affluent droppings all over the place," he said. "And then the same people turn around to criticize and blame the authorities for inefficiency and dirty pavements. What do they expect the officers to do? Go down with a broom every time their dog feels the pressure in his bowels? In America every dog owner has to clean up after his pet has done the job. Same in Japan. Will the Indian citizen do that here?" He's right. We go to the polls to choose a government and after that forfeit all responsibility. We sit back wanting to be pampered and expect the government to do everything for us whilst our contribution is totally negative. We expect the government to clean up but we are not going to stop chucking garbage all over the place nor are we going to stop to pick a up a stray piece of paper and throw it in the bin. We expect the railways to provide clean bathrooms but we are not going to learn the proper use of bathrooms. We want Indian Airlines and Air India to provide the best of food and toiletries but we are not going to stop pilfering at the least opportunity. This applies even to the staff who is known not to pass on the service to the public. When it comes to burning social issues like those related to women, dowry, girl child and others, we make loud drawing room protestations and continue to do the reverse at home. Our excuse? "It's the whole system which has to change, how will it matter if I alone forego my sons' rights to a dowry." So who's going to change the system? What does a system consist of? Very conveniently for us it consists of our neighbors, other households, other cities, other communities and the government. But definitely not me and YOU. When it comes to us actually making a positive contribution to the system we lock ourselves along with our families into a safe cocoon and look into the distance at countries far away and wait for a Mr. Clean to come along & work miracles for us with a majestic sweep of his hand. Or we leave the country and run away. Like lazy cowards hounded by our fears we run to America to bask in their glory and praise their system. When New York becomes insecure we run to England. When England experiences unemployment, we take the next flight out to the Gulf. When the Gulf is war struck, we demand to be rescued and brought home by the Indian government. Everybody is out to abuse and rape the country. Nobody thinks of feeding the system. Our conscience is mortgaged to money.


Dear Indians, The article is highly thought inductive, calls for a great deal of introspection and pricks one's conscience too....I am echoing J.F. Kennedy's words to his fellow Americans to relate to Indians.....


"ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY"


Lets do what India needs from us.


E-Mail address of Bharataratna Dr. A.P.J Abdul Kalam is apjabdulkalam@yahoo.com

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்

இந்தியாவின் மத்திய-கிழக்கு மாநிலங்களில் நடத்தி வரும் போரான காட்டு வேட்டையின் (Operation Greenhunt) அவசியம், நோக்கம் குறித்து, சோனியா – மன்மோகன் சிங் கும்பலின் ஊதுகுழலான சிதம்பரம் சோல்லி வருவதை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பாருங்கள். “நாட்டின் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் அப்பிரதேசத்தை முன்னேற்றவும் அங்கு வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கத் தடையாகவும் உள்ள மாவோயிச நக்சல்பாரிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்கிறார் சிதம்பரம்.

“என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள்? யார் யாருக்கான வளர்ச்சித் திட்டங்கள்?” என்று கேட்கிறார்கள், முற்போக்குப் பொருளாதார நிபுணர்கள், நாட்டுப்பற்றுடைய அறிவியல்-சுற்றுச்சூழல் அறிஞர்கள், உண்மையான மனித உரிமைப் போராளிகள், ஜனநாயக அறிவுஜீவிகள், நியாயமான பத்திரிக்கை – வானொளி செய்தியாளர்கள்.

ஒவ்வொரு நாளும் நிறையவே சண்டப்பிரசண்டம் செய்யும் சிதம்பரம் இந்தக் கேள்விகளுக்கு ஒருபோதும் பதில் சோல்வதில்லை. ஆனால், அவற்றுக்கான பதில்களை, நடைமுறை எடுத்துக்காட்டு மூலம் கர்நாடகா – ஆந்திரா எல்லையில் செய்து காட்டி வருகிறார்கள், இப்போது நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டுவரும் “பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.”

யார் இந்த ரெட்டி சகோதரர்கள்? வெங்காய விளைச்சலில் பிரபலமான பெல்லாரி மாவட்டத்தின் தலைநகர் பெல்லாரி நகரின் போலீசு நிலையத் தலைமைக் காவலர் கெங்கா ரெட்டியின் மூன்று மகன்கள்தாம் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி. அவர்கள் வளர்ந்த போலீசுக் காலனியில் கற்றுக் கொண்ட இரண்டு பாடங்கள்: அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மிக முக்கிய கருவியாகிய பணம் பாதாளம் வரை பாயும்; சட்டத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அதை ஓய்வின்றி அலைக்கழியச் செய்து விட்டு நீ உன் வேலையைப் பார்; இந்த இரண்டு பாடங்களையும் வைத்து சிட்பண்டு, ஓட்டல், வாரப்பத்திரிகை ஆகிய தொழில்களை நடத்தி, எல்லாவற்றையும் விட முக்கியமாக இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் வெறித்தனமாக இறங்கி, பணத்தைக் குவிப்பதற்காக பல சட்டவிரோத – மோசடி வேலைகளில் ஈடுபட்டு, ஒரு பத்தாண்டுக்குள் கர்நாடகா மாநில அரசியலிலும், பொருளாதாரத்திலும் அசைக்க முடியாத பெரும் புள்ளிகளாகி விட்டார்கள்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் மூத்தவர் கருணாகர ரெட்டி, கர்நாடகா மாநில வருவாத் துறை அமைச்சர். அடுத்தவர் ஜனார்த்தன ரெட்டி – மூவரில் வில்லத்தனமான நாயகன், மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர். மூன்றாமவர், கர்நாடகா மாநில பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராக உள்ள சோமசேகர ரெட்டி. மாநில மருத்துவ அமைச்சர் பி.சீறீராமுலு – இவர்களின் உடன்பிறவா சகோதரர். கர்நாடகாவின் கடந்த மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு வேண்டி “ஆப்பரேசன் கமல்” (தாமரை நடவடிக்கை) என்ற பெயரில் பணபலமும் ஆள்பலமும் கொடுத்து, பா.ஜ.க.வெற்றியின் சூத்திரதாரர்களாக இருந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள்தாம்.

எப்போதும் பல கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ரெட்டி சகோதரர்களின் சட்டைப் பையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, பெல்லாரி மாவட்ட நிர்வாகத்தில் சில அதிகாரிகளை முதலமைச்சர் எடியூரப்பா மாற்றம் செய்ய முயன்றபோது, 40 எம்.எல்.ஏ.களை ஐதராபாத்துக்குக் கடத்திக் கொண்டு போனார்கள், ரெட்டி சகோதரர்கள். எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுத் தமது விசுவாசியை முதலமைச்சராக்கி விடப் போவதாக மிரட்டினர். சுஷ்மா, அத்வானி போன்ற பா.ஜ.க. தலைவர்கள் பேரம் பேசி எடியூரப்பாவை அடக்கி வைத்தனர். பல் பிடுங்கப்பட்ட எடியூரப்பா தன் நிலைக்காக தொலைக்காட்சியிலேயே பகிரங்கமாக கதறி அழுது விட்டார்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் கர்நாடக அரசியலில் மட்டுமல்ல, ஆந்திராவிலும், பா.ஜ.க. தலைவர்களைவிட காங்கிரசின் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் நெருக்கமானவர்கள். ராஜசேகர ரெட்டியின் மருமகனுடன் இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் நெருங்கிய கூட்டு வைத்திருப்பவர்கள். சோனியாவுக்கு எதிராக சுஷ்மாவை நிறுத்தி பிரதமராக்க முயன்ற ரெட்டி சகோரர்கள், இப்போதும் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர முதல்வராக்குவதற்குப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

ரெட்டி சகோதரர்களின் துரித வளர்ச்சி!

இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு, அரசு அனுமதியுடன் இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், இலாபம் சம்பாதிப்பதும், அதேபோல அரசியலில் ஈடுபட்டு அமைச்சர்களாவதும் செல்வாக்குப் பெறுவதும் குற்றமா? இதைத்தானே ரெட்டி சகோதரர்கள் செய்தார்கள் என்று பா.ஜ.க. வாதிடுகிறது. “அப்பாவி”கள் பலரும் அவ்வாறே எண்ணலாம்.

ஆனால், “2003-2004-ஆம் ஆண்டு விவரப்படி பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் வருமான வரி செலுத்தவேண்டிய அளவுக்குக்கூட வருமானம் இல்லாதவர்கள். அதன்பிறகு அவர்கள் 50,000 கோடி ரூபா மதிப்புடைய சோத்துக்களைக் குவித்துள்ளார்கள். இந்த செல்வத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?” என்று கேட்கும் கர்நாடகா மேலவை உறுப்பினர் கொண்டையா, அரசு சோத்துக்களைப் பயன்படுத்தி சோத்துச் சேர்த்த குற்றத்துக்காக, ஜனார்த்தன மற்றும் கருணாகர ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களின் உடன்பிறவா சகோதரர் சிறீராமுலு ஆகியோரின் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் மூலம் தேர்தல் ஆணையாளரிடம் மனுக் கொடுத்துள்ளார்.

ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோதச் செயல்கள் குறித்து மத்திய புலனாவு பிரிவின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப் போவதாக மாநில ஆளுநர் மிரட்டியிருக்கிறார். “காங்கிரசின் எடுபிடியாகச் செயல்படும் சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது, மாநில லோகாயுதா விசாரணை நடத்தும்” என்று மாநில பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. மாநில ஊழல் அதிகார முறைகேடுகளை தனிச் சிறப்பாக விசாரிப்பதற்காக உள்ள சிறப்பு ஆணையம் லோகாயுதா. தற்போது அப்பதவியில் உள்ள சந்தோஷ் ஹெக்டே, ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகளுக்கு எதிராகத் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக மாநில அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஜூனில் பதவி விலகல் கடிதம் கொடுத்தார். இதனால் மாநில ஆட்சியாளர்களின் குட்டு வெளிப்பட்டுப் போனதால் பதறிப்போன பா.ஜ.க. தலைமை அத்வானி மூலம் ஹெக்டேயை அணுகியது. “மாநில அரசின் தவறுகள் திருத்தப்படும், லோகாயுதாவுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்படும்” என்ற வாக்குறுதி கொடுக்கவே, ஹெக்டே பதவி விலகலை நிறுத்தி வைத்துள்ளார்.

ஆனால், “தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக காங்கிரசின் சதி” என்ற தயார்நிலை பதிலை பா.ஜ.க. எல்லாவற்றுக்கும் தீர்வாக வைத்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல், குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான இசுலாமியர் படுகொலைகள் ஆகியவற்றிலிருந்து குற்றவாளிகளைத் தப்புவிப்பதில் அக்கட்சி எவ்வளவு அக்கறை கொண்டுள்ளதோ, அதேபோல பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் விவகாரத்திலும் கடமைப்பட்டுள்ளது. ரெட்டி சகோதரர்களின் பணபலத்தைக் கொண்டு நடத்தப்பட்ட “தாமரை நடவடிக்கை”யால் தான் பா.ஜ.க. கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. அக்கட்சி ஆட்சியில் நீடிப்பதும் வீழ்வதும் ரெட்டி சகோதரர்களின் கை அசைவில் இருக்கிறது.

ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகள் அத்வானி – சுஷ்மா முதல் அனைவருக்கும் தெரியும். பெல்லாரியில் இருந்து 71 இலட்சம் டன்கள், அதாவது 60,000 கோடி ரூபா மதிப்புடைய இரும்பு, கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இதை கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவே மாநில சட்டப்பேரவையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு இன்னமும் தனக்கு மேல் பொறுப்பில் இருப்பவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள். ஆறு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இமாலய சாதனையை அவர்களால் எப்படிச் சாதிக்க முடிந்தது?

இரும்புக் கனிமச் சுரங்கங்களா?
தங்கக் கனிமச் சுரங்கங்களா?

வட கர்நாடகாவின் ஆந்திர எல்லையில் உள்ள பின்தங்கிய சிறிய மாவட்டம் பெல்லாரி. அதன் பாதிக்கும் மேலான பகுதிகள் இரும்புக் கனிமச் சுரங்கங்களைக் கொண்டது. 2008-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நூறு கோடி டன்கள் இரும்புக் கனிமங்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பூமிக்கடியில் சுரங்கங்கள் வெட்டி, தோண்டி எடுக்க வேண்டிய சிரமம் கூட கிடையாது. பூமியின் மேல் பரப்பில் திறந்தவெளி “சுரங்கம்” வெட்டினால் போதும் என்கிறவாறு சிறு சிறு குன்றுகளாகக் குவிந்து கிடக்கின்றன. அதில் 60 சதவீதமானவை இரும்பு மாவைப் போன்ற உயர் ரகத்தைச் சேர்ந்தவை. சீனாவில் 2008-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கான கட்டுமானத் தேவைகளின் காரணமாக எஃகு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. பெல்லாரி உயர்ரக இரும்புக் கனிமத்தில் 65% இரும்பு உலோகம் கிடைப்பதால் சீனத்தில் கூடுதலான விலையும் கிடைத்தது.

இப்போதைய கணக்கின்படி, ஒரு டன்னுக்கு இரும்புக் கனிமத்துக்கு வெறும் 27 ரூபா மட்டும் அரசுக்குச் செலுத்திவிட்டு, ஒரு டன் இரும்பை 7000 ரூபாக்கு விற்று நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபா வீதம் பெல்லாரி சகோதரர்கள் குவித்தார்கள். இந்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிமத் துறையின் கணக்கின்படி, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பெல்லாரி இரும்புக் கனிம வளத்தை 30 ஆண்டுகளில் வெட்டி எடுக்கவேண்டும். ஆனால், ஆறே ஆண்டுகளில் எல்லாவற்றையும் சூறையாடிவிடும் வேகத்தில் ரெட்டி சகோதரர்கள் அக்கனிமத்தை வெட்டியெடுத்து நாடு கடத்தி வருகிறார்கள். இவர்களின் இலாபவெறியில் பெல்லாரியில் இரும்புக் கனிமக் குன்றுகள் கரைந்து போகின்றன. ரெட்டி சகோதரர்களிடம் பணக் குன்றுகள் உயர்ந்து கொண்டே போகின்றன.

இதைப் பார்த்து, இரும்புக் கனிமங்கள் எங்கே கிடைக்கின்றன, எப்படி, எங்கே ஏற்றுமதி செய்வது என்று கூட அறியாத திடீர் பணக்காரக் கொள்ளைக் கூட்டம் குத்தகை கேட்டு அரசிடம் சாரிசாரியாகப் படையெடுத்தது. பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பட் அல்லது சந்தூர் வட்டத்தின் ஏதாவது வரைபடத்தையும் ஒரு கிராமத்தின் பெயரையும் கொடுத்து, ஏதாவது ஒரு எல்லையைக் குறிப்பிட்டு குத்தகைக்கு அரசிடம் விண்ணப்பித்தார்கள். அதைச் சோதித்தறியும் தகுதியுடைய அதிகாரிகள் மத்திய, மாநில அரசிடம் கிடையாது. இலஞ்சம் வாங்கிக் கொண்டு மானாவாரியாக குத்தகை உரிமம் கொடுத்தார்கள். இப்படி ஒரு குறுகிய காலத்தில் 158 குத்தகை உரிமைகள் வழங்கப்பட்டு விட்டன.
தடைகளைத் தகர்த்தது

ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி

கனிமங்கள் வைத்துள்ள முதலாளிகள் யாராவது சில தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ‘மானாங்கானி’யாக கனிமங்களை வெட்டி, விருப்பப்படி லாரியில், கப்பலில் ஏற்றிக் கொண்டு போ விற்றுவிட முடியாது. அப்படிச் செய்தால் நாட்டுவளம் அராஜகமாகச் சூறையாடப்பட்டு சுற்றுச்சூழல் கேடுகள் விளையும் என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே சுரங்கங்கள் வெட்டுவதற்கும் தொழில் நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளும், வரம்பீடுகளும், விதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. சுரங்க நிர்வாகிகளுக்கான சான்றிதழ் பெற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் கனிமம் வெட்டி எடுக்கப்பட வேண்டும். வெடிபொருட்களைப் பயன்படுத்துவதாலும், பணியாற்றுபவர்களின் சுவாசம் பாதிக்கப்படுவதும் விபத்துக்கான வாப்புகள் அதிகமாக உள்ளதாலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுரங்கத்திலும் குறிப்பிட்ட அளவுதான் (மண் சரிவும் விபத்தும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆறு மீட்டர் ஆழம் வரைதான்) வெட்டியெடுக்க வேண்டும். ஒரு சுரங்கத்துக்கும் மற்றதுக்கும் குறிப்பிட்ட இடைவெளி விடவேண்டும். வனங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் காடு சாராத நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூடாது. வெட்டியெடுக்கப்படும் கனிமத்தை ஒதுக்கப்பட்ட குத்தகைப் பகுதிக்கு வெளியேயோ, ஏற்றுமதிக்காக துறைமுகங்களிலோ இருப்பு வைக்கும்போது அரசு புறம்போக்கு இடங்களில் குவித்து வைக்கக் கூடாது. லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்குத்தான் கனிமச் சுமையேற்றலாம். அதையும் தார்பா போட்டு மூடித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

இத்தனையையும் மேற்பார்வையிட்டு, சோதித்தறிந்து, அமலாக்க வேண்டிய பொறுப்புடையது மைய அதிகார அமைப்புக்குழு (சி.ஈ.சி). ஆனால், அதற்கென்று உள்ளூரில் அதிகாரிகள் கிடையாது. கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, மத்திய வருவா மற்றும் தீர்வுத்துறை, துறைமுகத்துறை மற்றும் போலீசு ஆகிய அரசுத் துறைகளின் அதிகாரிகளைக் கொண்டுதான் அப்பணிகள் செயல்படுத்தப்பட வேண்டிய நிலையே உள்ளது. அரசுத்துறை அதிகாரிகளைத்தான் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் விலைக்கு வாங்கிவிட முடியும். இந்த உண்மையை அறியாத சுரங்க முதலாளிகளே கிடையாது. அதிலும் குறிப்பாக பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ஆள்பலம் – குண்டர்படை, பணபலம், அதிகாரபலம்மிக்கவர்கள். அவர்கள் தமது நரித்தனமான மூளையைப் பயன்படுத்தி கர்நாடகாவின் கனிம வளங்களைச் சூறையாடுவதில் வேறு எவரும் எட்டமுடியாத உச்சத்துக்கு போவிட்டார்கள். விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரம்புகள், சட்டவிதிகள் எல்லாவற்றையும் தகர்த்து, பல பத்தாயிரம் கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமத்தை ஒரு சில ஆண்டுகளில் கடத்தி விற்றுள்ளார்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.

இத்தனைக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு பெல்லாரியில் இரும்புக் கனிமம் எடுப்பதற்கு ஒரு துண்டு நிலம் கூட குத்தகை உரிமை கிடையாது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஆசியோடு “ஓபுலாபுரம் சுரங்கக் கம்பெனி”யை ரெட்டி சகோதரர்கள் தொடங்கியது ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில்தான். அனந்தபுரத்தில் சுமார் 107 ஹெக்டேர் நிலத்தை அவர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தாலும், அங்குள்ள இரும்புக் கனிமம் ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானதில்லை. பெல்லாரி இரும்புக் கனிமத்துக்கு சீனத்தில் பெரும் கிராக்கி இருப்பதைக் கண்டு கொண்டு அவர்கள் தம் பார்வையை அங்கு திருப்பியபோது, அவர்கள் கால் வைப்பதற்கு கூட பெல்லாரியில் இடம் கிடையாது. ஒருமுறை குத்தகைக்கு விடப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு அதை இரத்து செய்ய முடியாது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிப்பதற்காக வரும்போதுதான் ரத்து செய்யலாம். இவ்வாறு பெல்லாரியில் மட்டும் 100 குத்தகைகளும், அருகிலுள்ள சித்திர துர்க்கா மற்றும் தும்கூர் மாவட்டங்களில் 60 குத்தகைகளும் ஏற்கெனவே தரப்பட்டிருந்தன.

பெல்லாரியில் குத்தகை எடுப்பதற்கு இன்னமும் 20 ஆண்டுகளுக்கு ரெட்டி சகோதரர்கள் காத்திருக்க வேண்டும். என்ன செய்வது? பணத்தை வீசி எறிந்தால் ரெட்டி சகோதரர்களுக்குச் சேவை செய்ய ஒரு சதிகார வழக்கறிஞர்கள் கூட்டம் ஆந்திராவில் காத்திருந்தது. அவர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். பெல்லாரியில் ஏற்கெனவே குத்தகை எடுத்துவிட்டு, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான இயந்திர மற்றும் போக்குவரத்து வசதியில்லாதவர்கள் பலர் இருந்தனர். குத்தகைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகளில் வேலை தொடங்காவிட்டால் குத்தகை இரத்து செய்யப்படும். அப்படிப்பட்டவர்களைப் பிடித்து கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களின் பெயரில் உள்ள உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்வது; குத்தகைதாரர்களுக்கிடையேயான தகராறுகளைப் பயன்படுத்தியும், பணியாத குத்தகைதாரர்களை குண்டர்படையை வைத்து தாக்கியும் மிரட்டியும் வெளியேற்றிவிட்டு சுரங்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வது; போலி உரிமத்தைக் காட்டியும் இலஞ்சம் கொடுத்தும், அண்டை ஆந்திராவின் அனந்தபுரத்து சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமம் என்று கணக்குக் காட்டியும் துறைமுகங்களுக்குக் கடத்திக் கொண்டு போ ஏற்றுமதி செய்துவிடுவது – இவைதான் சதிகார வழக்கறிஞர்களின் ஆலோசனை. இனி என்ன! களத்தில் குதித்த ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி ஏற்றப்பட்டது!

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் சாதனை!

“குருவி” திரைப்படத்தில் காட்டப்படும் கடப்பா ரெட்டிகளின் கனிம சுரங்கத் தொழில் கொடூரத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமானது பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கொடூரம். அந்தப் படத்தில் காட்டப்படுவதைவிடப் பிரம்மாண்டமான பல ஏக்கர் நிலத்தில் ரெட்டி சகோதரர்கள் நவீன மாளிகையை அரண்மனையைப் போல கட்டிவருகிறார்கள். அரை கி.மீட்டருக்கு நீண்ட நெடிய மதில் சுவர்களைக் கொண்ட பாதையில் கண்காணிப்பு காமிராக்களைக் கடந்துதான் அந்த மாளிகையை அடைய முடியும். ஒரு ஏக்கர் பரப்பில் 60-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட புதுக்கட்டிடம் எழுப்பப்படுகிறது. குண்டு துளைக்க முடியாத பாதுகாப்பு அறைகள், இரவுப் பார்வை உடைய அவர்களது ஹெலிகாப்டர்கள் இறங்கக் கூடிய மேடை, நீச்சல் குளம், நவீன உடற்பயிற்சிக் கூடம், சாரிசாரியான கார்களில் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்புப் படையினர் என சினிமாவை விஞ்சுகிறது அந்த மாளிகை. அந்த மாளிகையை ஒட்டி, அதைபோலவே எல்லா வசதிகளும் நிரப்பிய மற்றொரு மாளிகை அவர்களின் நெருங்கிய சகாவும் கர்நாடகா மருத்துவ அமைச்சருமான சீறீராமுலுவுக்கும் உள்ளது.

இவ்வளவு பணத்தையும் சோத்துக்களையும் ஒரு குறுகிய காலத்தில் ரெட்டி சகோதரர்களால் எப்படிக் குவிக்க முடிந்தது?. பெல்லாரியில் உள்ள 68 கனிம வயல் குத்தகைகாரர்களின் 48 பேர்களுடன் மேல் குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். பணியாத குத்தகைதாரர்களின் கனிம வயல்கள் மீது குண்டர் படையை ஏவி ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

பெல்லாரியில் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமத்தை காட்டுவழியே லாரிகளில் கடத்திக் கொண்டு வந்து இந்த ஏ.ஜி.கே.சுரங்கப் பகுதியில் குவித்து வைத்து விடுவார்கள். பிறகு, இக்கனிமம் முழுவதும் ஆந்திராவில் வெட்டியெடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டுவார்கள். கர்நாடகாவில் கள்ளத்தனமாக இரும்புக் கனிமத்தை வெட்டியெடுப்பதற்காக ஆந்திரா-கர்நாடகாவின் எல்லையையே அராஜகமாக மாற்றி அமைத்துக் கொண்டார்கள். எல்லைக் கற்களை அவ்வப்போது ரெட்டியின் ஆட்களே பிடுங்கி நட்டுக் கொள்வார்கள். ஆண்டுக்கு 2,3 முறை இப்படி நடக்கும். யாராவது புகார் கொடுத்து மேற்பார்வையிட அதிகாரிகள் வந்தால் இலஞ்சம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஒருபாறைக் கோயிலின் அருகே ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையைக் குறிக்கும் கல்வெட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே செய்துக்கப்பட்டிருந்தது. கோவிலோடு அதை வெடிவைத்துத் தகர்த்து வீசிவிட்டார்கள். அதன்மூலம் ஆந்திராவின் எல்லையை கர்நாடகாவுக்குள் தள்ளிப் போட்டுக் கொண்டு இரும்புக் கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டார்கள். சட்டவிரோதமாகக் காடுகளை அழித்து, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்ததோடு, அவற்றைச் சேர்த்து வைக்கவும் கடத்திச் செல்ல பாதை அமைக்கவும் காடுகளை அழித்தார்கள்.

வெட்டியெடுக்கப்பட்ட கனிமத்தை அருகிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஒவ்வொரு லாரிக்கும் கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றின் “பர்மிட்கள்” வேண்டும். ஒவ்வொரு லாரியும் குறிப்பிட்ட அளவுதான் சுமை ஏற்றிச் சேல்ல வேண்டும். இவற்றைச் சோதித்தறிவதற்கு வழியில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. ஆனால், ஸ்வத்திக் அல்லது வேறு சின்னம் பொறித்த அட்டைகளை சோதனைச் சாவடிகளில் விசிறிக் காட்டிவிட்டு அந்த லாரிகள் பறக்கின்றன. துறைமுகத்தில் ஏற்றுமதியின் போதும் சோதித்தறியப்படும். ஆனால், போலி “பர்மிட்”டுக்களை தயாரித்தும், இவை எல்லாவற்றையும் மீறி இலஞ்சம் கொடுத்தும் மிரட்டியும் ஏமாற்றியும் இரும்புக் கனிமத்தைக் கடத்திக் கொண்டு போனார்கள்.

துரிதப் பணம் சம்பாதிப்பதற்காக ஒவ்வொரு லாரியிலும் ஒன்றரை அல்லது இரண்டு மடங்கு மிகை சுமை ஏற்றினார்கள். 10,000 லாரிகள் ஓட்டப்பட்டன. ஒவ்வொன்றும் நாளுக்கு 600 கி.மீ. தூரத்துக்குப் போ வந்தன. இவ்வளவு லாரிகளையும் ஓட்டுவதற்கு ஓட்டுநர்கள் கிடைக்காததால், கிளீனர்களே ஓட்டி பல விபத்துகள் நடந்தன. இவ்வளவு சுமை வாகனங்களைத் தாங்க முடியாத சாலைகள் நாசமாகின. தார்ப்பா போட்டு மூடி எடுத்துச் செல்லாததால் (அப்படிச் செய்ய கூடுதல் செலவும் தாமதமும் ஆகும்) வழியெல்லாம் இரும்புக் கனிமத் துகள் பறந்து, எங்கும் செம்மண் புழுதியாகி சுற்றுச் சூழல் நாசமாகின.

ஒருமுறை கர்நாடகா ஊழல் தடுப்பு லோகாயுதா அதிகாரிகள் சோதனையிட்டபோது எந்த லாரிக்கும் உரிம  ஆவணங்கள் “பர்மிட்டுகள்” கிடையாது. இரண்டு கோணிப் பைகள் நிறைய போலி ஆவணங்கள் பிடிபட்டன. 200 கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமங்கள் கைப்பற்றப்பட்டு துறைமுகத்தில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது. அவற்றை ஒரே வாரத்தில் திருடி விற்று விட்டுக் காணவில்லை என்று அறிவித்து விட்டார்கள். சோதனையிட்ட அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். சி.பி.ஐ. ரெய்டு வருகிறது என்று அறிந்து, பெல்லாரி அருகே உள்ள தனது சுரங்கக் கம்பெனி அலுவலக ஆவணங்களை இரவோடு இரவாக அள்ளிக் கொண்டுபோன ரெட்டி சகோதரர்கள், அந்த அலுவலகத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

இப்போது 5,6 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபா மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக ஒப்புக் கொள்ளும் மாநில, மத்திய அரசுகளும் ஆளும் கட்சிகளும் முறையே மாநில லோகாயுதா விசாரிப்பதா, சி.பி.ஐ. விசாரிப்பதா என்று இலாவணிக் கச்சேரி நடத்துகிறார்கள். கொஞ்சநாள் இது நடக்கும், பிறகு எவ்வித பாதிப்புமில்லாமல் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் தமது “ராஜ்ஜியத்தைத்” தொடர்வார்கள். ஏனெனில் ஆந்திராவில் காங்கிரசும், கர்நாடகாவில் பா.ஜ.க.வும் அவர்களின் சட்டைப் பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரம் கூறுவதைப் போல அரசாங்கத்தின் சட்டத்திற்குச் சவாலா விளங்கும் காரணத்திற்காக காட்டு வேட்டை நடத்துவது என்றால் முதலில் ரெட்டி சகோதரர்களுக்கெதிராக நடத்த வேண்டும். ஆனால், கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் ரெட்டி சகோதரர்கள் என்ன செய்கிறார்களோ அதை மத்திய-கிழக்கு இந்திய காடுகளில் டாடா, எஸ்ஸார், வேதாந்தா, போஸ்கோ போன்ற உள்நாட்டு-வெளிநாட்டு ஏகபோக, பன்னாட்டு, தரகு முதலாளிகள் நடத்துவதற்கு வசதியாக பழங்குடி மக்கள் மற்றும் மாவோயிச நக்சல்பாரிகளை அகற்ற வேண்டியுள்ளது. அதற்காக ஏவிவிடப்பட்டுள்ளதுதான் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் நடத்தும் காட்டுவேட்டை.

___________________________

Friday, September 24, 2010

ஊழலை வெளிக்கொண்டு வர ஸ்டிங் ஆபரேஷன் : டில்லி ஐகோர்ட் நீதிபதி ஆதரவு

பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய எம்.பி.,க்களை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் இருவர் மீதான வழக்குகளை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஊழலை வெளிக்கொணர ஸ்டிங் ஆபரேஷன் நடத்துவதில் தவறில்லை என்றும் கூறியது. இத்தீர்ப்பை பரபரப்பாக வழங்கினார்  நீதிபதி திங்கரா. போலீசார் வழக்கு பதிவு செய்த விதத்தையும் கண்டித்தார்.

பார்லிமென்டில் கேள்வி கேட்க, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.,க்கள் லஞ்சம் வாங்கிய விவகாரம் கடந்த 2005ம் ஆண்டு டிசம்பரில் வெளிச்சத்திற்கு வந்தது. "ஆஜ்தக்' செய்தி சேனல், "ஆபரேஷன் துரியோதன்' என்ற பெயரில் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் இந்த விவகாரம் நாட்டு மக்களுக்கு தெரிந்தது. இதையடுத்து, லஞ்சம் வாங்கிய எம்.பி.,க்கள் தொடர்பாக விசாரணை நடத்த பார்லிமென்டின் இரு சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டி, லஞ்சம் வாங்கிய லோக்சபா எம்.பி.,க்கள் 10 பேரையும், ராஜ்யசபா எம்.பி., ஒருவரையும் பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. அதே நேரத்தில், ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய நிருபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஊழலை ஊக்கப்படுத்தும் வகையில் எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக, பத்திரிகையாளர்கள் அனிருத் பாகல் மற்றும் சுகாசினி ராஜ் என்ற இருவருக்கு எதிராக டில்லி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.  ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 12 , 13 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 பி-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. பத்திரிகையாளர்கள் இருவரும் "கோப்ரா போஸ்ட் டாட் காமை' சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை பரிசீலித்த சிறப்பு கோர்ட் நீதிபதி, அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி, பத்திரிகையாளர்கள் இருவரும் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு விசாரணைக்கு வந்த போது, டில்லி போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல், ""பத்திரிகையாளர்கள் பாகல் மற்றும் ராஜுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே. எம்.பி.,க்களுக்கு இவர்கள் லஞ்சம் கொடுத்தது ஊழலை ஊக்கப்படுத்தும் செயல்,'' என்றார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பத்திரிகையாளர்களின் வக்கீல், ""எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்திருக்காவிட்டால், இந்த ஸ்டிங் ஆபரேஷனே நிகழ்ந்திருக்காது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததன் மூலம், ஊழல் எம்.பி.,க்களை காப்பாற்ற போலீசார் முற்பட்டுள்ளனர்,'' என்றார். இதையடுத்து பத்திரிகையாளர்களின் மனு மீதான தீர்ப்பை கடந்த செப்டம்பர் 17ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி திங்ரா  கூறியதாவது: பார்லிமென்டில் கேள்வி கேட்க எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர்கள் அனிருத் பாகல் மற்றும் சுகாசினி ராஜ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக 2009 ஜூலை 6ம் தேதி சிறப்பு கோர்ட் பிறப்பித்த உத்தரவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது, இந்த நாட்டின் மக்கள் தங்களின் கடமைகளைச் செய்ய விடாமல் தடுப்பது போன்றது. அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறியதாகும். அதே நேரத்தில், எம்.பி.,க்களுக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் வழக்கின் விசாரணை தொடரும்.

நாட்டில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது. எனவே உயர்மட்டத்தில் நிலவும் ஊழலை வெளிக்கொணர, ஒருவர் லஞ்சம் வாங்கத் தூண்டும் ஏஜன்ட் போல செயல்படுவதில் தவறில்லை. அதை குற்றத்திற்கு உதவி புரிந்ததாக கருத முடியாது. இந்த ஊழல் வழக்கில் டில்லி போலீசார் செயல்பட்ட விதம் சரியில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களின் உத்தரவுக்கு ஏற்றவாறு  செயல்பட்டுள்ளனர். ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் பாடுபட வேண்டும். ஊழல் பற்றிய விவரங்கள் தங்களின் கவனத்திற்கு வரும் போது, அதை வெளிப்படுத்த முற்படுவதில் தவறில்லை. அனைத்து மட்டத்திலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். நீதிபதிகளின் நேர்மையை கூட இதுபோன்ற ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அவ்வப்போது பரிசோதிக்கலாம். இவ்வாறு நீதிபதி திங்கரா  கூறினார்.  

Monday, September 20, 2010

காங்கிரஸ் எனக்கு ரூ. 300 கோடி பணம் கொடுத்ததா?: விஜயகாந்த்

 திமுகவை ஆட்சியிலிருந்து விரட்டுவதே எனது முதல் வேலை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் [^].

சென்னையில் தேமுதிக 6வது ஆண்டு விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சித் தலைவர் விஜயகாந்த் சிறப்புரையாற்றினார்.

விஜயகாந்த் பேசியதாவது...

தே.மு.தி.க. ஆட்சிக்கு வராது என்று புலம்புகிறார்கள். நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. தெய்வம் இருக்கிறது. நான் கடவுளை நேசிக்கிறேன். விழுப்புரத்தில் அம்பேத்கார் சிலை வைத்த என்னுடைய தொண்டர்களை தடுத்திருக்கிறார்கள். என்னுடைய கட்சியை சேர்ந்த 260 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டோம். என்மீது வேண்டுமானாலும் வழக்கு போடட்டும். நானும் ஜெயிலுக்கு செல்ல தயார்.

என்னுடைய படமான விருதகிரி வெளிவரவிடாமல் தடுக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். எத்தனையோ கோடிகளை இழந்திருக்கிறேன். திருமண மண்டபத்தை கூட இழந்திருக்கிறேன். பல கோடிகளை பார்க்கவேண்டும் என்றால் அரசியலில் கூட்டணி வைத்திருப்பேன்.

விஜயகாந்த் இந்தப்பக்கம் போய்விட்டார், அந்தப்பக்கம் போய்விட்டார் என்று கூறுகிறார்கள். கூட்டணி பற்றி நான் மக்களை குழப்புவதாக கூறுகிறார்கள். நான் தெளிவாகதான் இருக்கிறேன். அவர்கள் தான் கூட்டணி பற்றி குழம்பிபோய் இருக்கிறார்கள். கூட்டணி சம்பந்தமாக தொண்டர்களை கலந்து பேசிதான் முடிவு செய்வேன். தொண்டர்களை கலந்து பேசாமல் எதையும் செய்யமாட்டேன். மக்களுக்காக தொண்டு செய்வதுதான் எனது வழி.

எங்கு சென்றாலும் என்னை ராஜா மாதிரி அழைத்து செல்கின்றீர்கள். இதைவிட எனக்கு என்ன வேண்டும். ஒவ்வொரு தொண்டனுடைய வீட்டிலும் ஒரு நாள் சாப்பிட்டாலே போதும்.

எங்களுடைய கட்சி தொண்டர்களை சீண்டி பார்க்காதீர்கள். இங்கு வந்திருக்கும் கூட்டம் திரட்டப்பட்ட கூட்டமல்ல. திரண்டு வந்திருக்கும் கூட்டம். என்னை ஆட்சியில் அமரவைத்தால் மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டிக் காட்டுவேன்.

காங்கிரஸ்காரர்கள் 300 கோடி பணம் கொடுத்ததால்தான், நான் தனியாக தேர்தலில் நிற்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். வருகின்ற சட்டசபை தேர்தலிலும் நான் பணம் வாங்கினேன் என்று வதந்தியை பரப்ப தயாராக 
உள்ளனர்.

திமுகவும், காங்கிரஸும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தபோது எம்.ஜி.ஆர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக் காட்டினார். எனவே மக்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பவர்கள். கூட்டணியைப் பொறுத்தவரை நான் மக்களைத்தான் முதலில் மதிப்பேன்.

கருணாநிதிக்கு சகிப்புத் தன்மை போய் விட்டது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதையும் தாங்கும் இதயம் என்று போதித்த அண்ணாவின் வழிவந்தவரா கருணாநிதி [^] என்ற சந்தேகம் வருகிறது. எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள முதலில் கருணாநிதி பழகிக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு தாங்கும் சக்தியை தர வேண்டியதுதான் அரசின் கடமை. ஆனால் இலவசப் பொருட்களைக் கொடுத்து கொடுத்து அவர்களின் சக்தியை குறைத்து சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. 

மத்திய அரசின் திட்டங்களான 108 ஆம்புலன்ஸ் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் போன்றவற்றை தனது சொந்தத் திட்டம்போல கூறி மக்களை ஏமாற்றுகிறது.

பல பிரச்சினைகளில் கருணாநிதி இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். பன்றிக் காய்ச்சல் பிரச்சினை பூதாகரமாக இருப்பது குறித்து நான் எச்சரித்தபோது அதை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது பன்றிக்காய்ச்சல் பெரிதாக பரவி வருவதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களின் ஓட்டு மட்டும் கருணாநிதிக்கு வேண்டும். ஆனால் அவர்களது தொலைக்காட்சி, விநாயகர் சதுர்த்தி தின சிறப்பு நிகழ்ச்சி என்று சொல்ல மனம் இல்லாமல், விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று கூறுகிறது. பெயரைச் சொல்லக் கூட அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இதனால் தமிழக மக்கள் அடைந்த பலன் என்ன என்பதை அவர்கள் சொல்ல முடியுமா.

சினிமாத்துறையை இன்று கருணாநிதியின் பெரிய குடும்பம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இங்கு கூடியிருப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும், ஜனநாயகமா, குடும்ப ஆட்சியா?. இந்த ஆட்சியை அகற்ற எனக்கு உதவுவீர்களா? (கூட்டத்தினர் ஆம் என்று பலத்த கோஷமிட்டனர்)

எனது முதல் வேலையே திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான். நான் அதைச் செய்வேன் என்றார் விஜயகாந்த்.

நேற்றைய பேச்சில் திமுகவை மட்டும் கடுமையாக சாடிப் பேசிய விஜயகாந்த் அதிமுக குறித்தோ,ஜெயலலிதா [^] குறித்தோ எதுவுமே பேசவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 30 சீட், 40 சீட்டுக்கெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே அவர் விமர்சித்துப் பேசினார்

Wednesday, September 15, 2010

'U‌n‌i‌t‌e‌d S‌t​a‌t‌e‌s ‌o‌f I‌n‌d‌ia': நாட்டின் பெயரை மாற்றக் கோரி மதிமுக தீர்மானம்

இந்தியாவில் உண்மையான மாநில சுயாட்சி மலர அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் ​(U‌n‌i‌o‌n ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் ​(U‌n‌i‌t‌e‌d S‌t​a‌t‌e‌s ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்பட வேண்டும் என்று மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணாவின் 102வது பிறந்தநாளையொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காவிரி ஆறு, முல்லைப் பெரியாறு,பாலாறு போன்றவற்றிற்கு தமிழகத்திற்கான பங்கைப்பெறுவதில் திமுக அரசு தனது ஆட்சிக்காலத்தில் தவறிவிட்டது. இதனை மதிமுக வன்மையாக கண்டிப்பதோடு தமிழகத்திற்காக உரிமைக்காக மதிமுக தொடர்ந்து போராடும். 

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் திமுக அரசு ஆளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோடி, கோடியாக பணத்தைச் செலவு செய்தும், அதிகார பலத்துடன் வன்முறை நடத்தியும் வெற்றி பெற அவர்கள் திட்டமிடுகின்றனர்.

திமுக தலைவரின் குடும்பமா? அல்லது தமிழ்நாட்டின் ஜனநாயகமா? என்பதுதான், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் முன் வைக்கப்படும் கேள்வி.

அண்ணாவின் லட்சியங்களை வென்றெடுக்க, மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பெயரளவில் தான் கூட்டாட்சியாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா வலியுறுத்தினார்.

திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர, அதனைக் கேட்டதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நாம் விட்டுவிடவில்லை. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை என்பதுதான் எங்கள் கோட்பாடு என்று அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 1967ம் ஆண்டில் கூறினார்.

"அரசியல் சட்டம் மறுஆய்வு செய்யப்படலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்' என்று அதை உருவாக்கிய அம்பேத்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மத்தியில் நிலைநாட்டப்பட்டு, மாநில சுயாட்சி மலர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்திய ஒன்றியம் ​(U‌n‌i‌o‌n ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் ​(U‌n‌i‌t‌e‌d S‌t​a‌t‌e‌s ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள ம.தி.மு.க. இடையறாது பாடுபடும்.

காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளியாகிவிட்ட, தமிழ் இனப் படுகொலையைக் கொடூரமாக நடத்திய சிங்கள அரசின் அதிபர் ராஜபக்சே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில், சுதந்திர தமிழ் ஈழத் தாயக லட்சியம், மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டதாகும். போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த லட்சியம் அழிந்து விடாது.

இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு [^] துரோகம் இழைத்தது. இதற்கு திமுகவும் உடந்தையாகச் செயல்பட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் ஈழ மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், அடிமை இருளில் இருந்து அவர்களை விடுவித்து, சுதந்திர ஒளியில் உரிமைக் கொடியை நாட்டுவதும், அவர்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள தாய்த்தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதால், திருச்சியில் 1995 ஜுலை 31ல் பிரகடனம் செய்த, `தனித் தமிழ் ஈழம்' என்ற தீர்மானத்தில், அணு அளவு மாற்றத்திற்கோ, சமரசத்திற்கோ இடம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற மதிமுக, ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டமைக்கவும் தொடர்ந்து பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை மதிமுகவின் நிர்வாகிகள் முன்மொழிய கூடியிருந்த சுமார் 15,000 தொண்டர்கள் கைத்தட்டலுடன் அவை நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே கட்-அவுட்களில் பெரியார், அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்-அவுட் வைக்கப்படவில்லை.

மாநாட்டுக்கு மதிமுகவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் பயணம்

காஷ்மீர் நிலவரத்தை நேரில் கண்டறிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவை அங்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அமைதியின்மை நிலவுகிறது. பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதனால், ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும், "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கடந்த திங்களன்று விவாதித்தது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்னை பற்றி விவாதிப்பது என, முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

ஐந்தரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், முதல்வர் ஒமர் பங்கேற்கவில்லை. அவர் தந்தையும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா பங்கேற்றார்.   ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய மக்கள் ஜனநாயக கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் கோரின. ஆனால், பாரதிய ஜனதாவும், மற்ற சில கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

கூட்டத்தில் பேசிய மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, ""ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்,'' என்றார்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பேசுகையில், ""ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை குறிப்பிட்ட பகுதிகளிலாவது வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்,'' என்றார். இதை இடதுசாரி கட்சிகளும், லோக்ஜனசக்தி கட்சியும் ஆதரித்தன.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""அமைதி வழியை கடைபிடிக்கும் யாருடனும் அல்லது எந்தப் பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், வன்முறை ஓயும் வரை பேச்சுவார்த்தை துவங்காது,'' என்றார். 

காஷ்மீர் இளைஞர்கள் கவலையை தீர்க்க திட்டம் தேவை என்று  காங்., தலைவர் சோனியாவும், "எந்தத் தீர்வானாலும் அரசியல் சட்ட அமைப்பிற்குள்  அமைய வேண்டும் ' என உள்துறை அமைச்சர் சிதம்பரமும் வலியுறுத்தினர்.  காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் கவலை தருகிறது என்றார் ராணுவ அமைச்சர் அந்தோணி.

பா.ஜ., சார்பில்  அத்வானி, சுஷ்மா, ஜெட்லி மற்றும் கட்சித் தலைவர் கட்காரி ஆகியோர் பங்கேற்றனர். வன்முறை இருக்கக்கூடாது என்று கட்காரி கூறினாரே தவிர, வேறு பரபரப்பு பேச்சை நிகழ்த்தவில்லை. ஆனால், சிவசேனா தரப்பில் ஆவேசக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

கூட்டத்திற்குப் பின், அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:இன்றைய (நேற்று) கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கான பயனுள்ள பல யோசனைகளை தெரிவித்தனர். நியாயமான எந்த அரசியல் கோரிக்கையையும் பேச்சுவார்த்தை மூலமாக, அமைதியான ஆலோசனைகள் மூலமாக, பரஸ்பரம் விவாதிப்பதன் மூலமாக  நிறைவேற்ற இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. அதை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அதனால், ஜம்மு  காஷ்மீர் மாநில நிலவரத்தை நேரில் கண்டறிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவை, அம்மாநிலத்திற்கு அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குழு செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். காஷ்மீர் செல்லும் இந்த தூதுக்குழுவினர் அனைத்து தரப்பு மக்களையும் சந்திப்பர். அவர்களின் கருத்தை கேட்டறிவர். அனைத்துக் கட்சி குழுவினரின் பயணத்திற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகமும், ஜம்மு  காஷ்மீர் மாநில அரசும் மேற்கொள்ளும். அனைத்துக் கட்சி குழுவினர் தரும் அறிக்கையின் அடிப்படையில், காஷ்மீர் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு அரசு முடிவெடுக்கும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யும் விவகாரத்தில், நேற்று நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்துதான் தூதுக்குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேறு ஏதோ காரணம் உள்ளது தி.மு.க., -  அ.தி.மு.க., வலியுறுத்தல்

""ராணுவத்தினரின் உணர்வுகளை எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது. அமைதியை நிலைநாட்ட அவர்களே காரணம். காஷ்மீரில் பெண்களும், சிறுவர்களும்கூட கல்லெறிந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.  அங்கு வேறு ஏதோ காரணம் உள்ளது. அதை கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும்,'' என  அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளன.காஷ்மீர் பிரச்னை குறித்து நேற்று டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பங்கேற்றன. தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவர் டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவர் தம்பிதுரையும் பங்கேற்றனர்.

 டி.ஆர்.பாலு பேசியதாவது: காஷ்மீரில் நடக்கும் கலவரங்களைப் பார்க்கும்போது அது சாதாரண காரணங்களுக்காக இருக்கும் என்று தெரியவில்லை. அங்கு பெண்களும் கல்லெறிகின்றனர். சிறுவர்களும் கூட கல்லெறிகின்றனர். இதை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே அரசாங்கம் பார்க்கிறது. அப்படி பார்ப்பதை ஏற்க முடியாது. இவர்கள் எல்லாம் எதிர்ப்பை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதே முக்கிய கேள்வி. மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள அரசாங்கம் முதலில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தம்பிதுரை:  ஆயுதப்படை வீரர்கள் நிறைய தியாகங்கள் செய்துள்ளனர். அவர்கள்தான் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட காரணமாக இருப்பவர்கள். அவர்களின் உணர்வுகளை எக்காரணம் கொண்டும் சிதைத்துவிடக் கூடாது. அதே சமயம், மக்களின் போராட்டத்தை அலட்சியம் செய்துவிடவும் முடியாது. காஷ்மீர் மாநில மக்களின், குறிப்பாக இளைஞர்களின்  தேவைகள் மற்றும் அவர்களது மனவோட்டத்தை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் பிரச்னையை தீர்வுக்கு அழைத்துச் செல்லும்.

இந்த கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கலந்து கொண்ட மெகபூபா முப்தியின் பேச்சுதான் சற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அவர் தனது பேச்சின்போது," இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் எல்லாருமே காஷ்மீர் என்ற மாநிலத்தை நிலமாகவே பார்க்கின்றனர். உங்களுக்கு எல்லாம் நிலம் மட்டும்தான் தேவைப்படுகிறது. அங்குள்ள மக்களாகிய நாங்கள் தேவையில்லைபோல. இந்த மனநிலை மாற வேண்டும். காஷ்மீர் பிரச்னையை நிலப்பிரச்னையாக பார்ப்பதை விட்டுவிட்டு அங்குள்ள மக்களின் பிரச்னைகள் என்ன என்பதை பார்க்க ஆரம்பித்தால்தான் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது,' என்றார்.

 பா.ஜ.,வின் சரர்பில் அத்வானி கலந்து கொண்டாலும், ஐந்தரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அவர் எதுவும் பேசவில்லை. அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி மட்டும், இந்தியில் தயார் செய்யப்பட்டிருந்த உரையை கூட்டத்தில் வாசித்தார்.

காஷ்மீர் ஆர்ப்பாட்டங்களில் பெண்கள்: பிரதமர் அதிர்ச்சி : காஷ்மீரின் மோசமான நிலவரம் குறித்து, டில்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:காஷ்மீரில் இழந்த அமைதி மற்றும் முன்னேற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே திரும்பப் பெற முடியும். வன்முறையைக் கைவிடும் பட்சத்தில் யாருடனும் அல்லது எந்தக் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.அரசுக்கு எதிரான மனக்குறைகள் கொண்டிருப்பவர்கள், அதுகுறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையை, வன்முறையையும் எதிர்ப்பையும் கைவிட்ட சூழலில்தான் நடத்த முடியும்.மத்திய அரசும், மாநில அரசும், இந்தக் கோரிக்கையை காஷ்மீர் மக்களின் முன் குறிப்பாக இளைஞர்களிடம் ஏற்கனவே வைத்துள்ளன. இப்போது நானும் அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன். பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கிய நேரத்தில் சிலர் பின்வாங்கினர். அது மிகவும் வருத்தத்துக்குரியது. ஆர்ப்பாட்டங்களில் ஆண்கள், பெண்கள் ஏன் குழந்தைகள் கூட கலந்து கொள்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சில ஆர்ப்பாட்டங்கள் திடீரென தாமாகவே நடக்கின்றன. ஆனால், சில ஆர்ப்பாட்டங்களை சில கூட்டங்கள் தூண்டி விடுகின்றன.மாநிலத்தில் அமைதி திரும்பவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.