Search This Blog

Tuesday, February 14, 2012

தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை: சொல்கிறார் ராமதாஸ்



தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்தாலும், தி.மு.க., தேர்தல்களில் வெற்றி பெறாது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது,'' என மதுரையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடினார்.

மதுரையில் கட்சியின் "புதிய அரசியல் புதிய நம்பிக்கை' செயல் திட்டத்தை வெளியிட்டு ராமதாஸ் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு ஒரே தீர்வு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது தான். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது. ஜான்பாண்டியன் கட்சி போட்டியிட்டால் ஆதரிக்கும். வரும் லோக்சபா தேர்தலில் தேசிய, திராவிட கட்சிகளுடன் பா.ம.க.,வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். கடலுள்ளவரை, பூமியுள்ளவரை இந்நிலை தொடரும். திராவிடம் என பெயரில் துவங்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., ஒரு வேளை கூட்டணி வைத்தாலும், தேர்தல்களில் வெற்றி பெறாது. கடந்த தேர்தலில் தே.மு.தி.க.,வை கூட்டணியில் இழுக்க, தி.மு.க., எவ்வளவோ முயற்சித்தது. இப்போதும் முயற்சிக்கிறது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது. தே.மு.தி.க., கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடிந்தது. தனித்து நின்றிருந்தால், ரிஷிவந்தியத்தில் கூட விஜயகாந்த் தேறியிருக்க மாட்டார்

ஜெயலலிதாவின் நேர்காணல் குமுதம் இதழில்

செல்வி ஒரு விளக்கம் :



1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா! அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!

சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன?

“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!

ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தது..

Monday, February 6, 2012

தாதாக்களின் ராஜ்ஜியத்தில் உ.பி.

பிரிக்க முடியாதது எதுவோ என்றால், உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற சம்பல் கொள்ளைக்காரி பூலன்தேவியையே எம்.பி.,யாகத் தேர்ந்தெடுத்து, அழகு பார்த்த மாநிலம் உ.பி., எனும்போது, வேறு என்ன விவரம் வேண்டும்?

ஒரு பெண்ணாக இருந்ததால், பூலன்தேவி பிரபலமாகிவிட்டாரே தவிர, அவருக்குச் சற்றும் சளைக்காத தாதாக்கள், உ.பி., அரசியலில் உண்டு. கட்சி பாகுபாடு இல்லாமல், எல்லாருமே தாதாக்களுக்கு இடம் கொடுத்தாலும், அதிக இடஒதுக்கீடு வழங்கிய பெருமை, கட்சியினரால், "நேதாஜி' என்றழைக்கப்படும் முலாயம் சிங்கையே சேரும்.மொத்தம் ஏழு கட்டமாக நடக்கும் தேர்தலில், நாளை நடக்கும் முதல் கட்டத்தில் மட்டுமே 109 வேட்பாளர்கள், கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என, பட்டியலிடுகிறது, உத்தர பிரதேச தேர்தல் கண்காணிப்புக் குழு என்ற தனியார் தன்னார்வ நிறுவனம்.ஒவ்வொரு கட்சி சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள, "தலை'களின் பட்டியலைப் போட்டால் பக்கம் பத்தாது. சாம்பிளுக்கு மட்டும் சிலரைப் பார்க்கலாம்.

முதலில், புரட்சிப் புயல் ராகுலின் மேற்பார்வையிலான, காங்கிரஸ் கட்சி. ஜமானியா தொகுதியில் போட்டியிடும் கலாவதி பிந்த் என்ற பெண், முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தகுதி, அடியாட்களோடு சேர்ந்து ஒரு போலீஸ்காரரை கொன்ற வழக்கு.பாப்பன் ராஜ்பர் என்பவர் ராஸ்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்ட இவர் மீதுள்ள வழக்குகள் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், கொலை முயற்சி.பிந்த்ராவிலிருந்து போட்டியிடும் அஜய் ராய் மீது கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அண்ணன் இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்தவர். இப்படி, பக்கீர் சித்திக்கி (லக்னோ மத்தி), விஜய் துபே (கட்டா) என, ஏராளமான தாதாக்களுக்கு தஞ்சமளித்துள்ளது காங்கிரஸ்.

சமாஜ்வாடி கட்சி:இனி, சமாஜ்வாடி கட்சியின் முறை. கப்தான் சிங் ராஜ்புத் (சர்க்காரி), தன் சகோதரருடன் இணைந்து, மகுபா மற்றும் ஜாலோன் பகுதிகளில் ஒரு கொள்ளைக் கும்பலையே நடத்தி வந்தவர். இந்தக் கும்பல் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.திபாய் தொகுதியில் போட்டியிடும் பக்வான் சர்மா மூன்று முறை கைது செய்யப்பட்டவர். ஒன்று கொலை, அடுத்தது கற்பழிப்பு, மூன்றாவது அதிகாரிகள் கடத்தலுக்காக. அம்ரோகாவைச் சேர்ந்த மெகபூப் அலி மீது 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறை சென்ற பெருமை இவருக்கு உண்டு. இவர்கள் மட்டுமின்றி, அபய் சிங் (கொசோய்கஞ்ச்), மித்ராசென் யாதவ் (பிகாபூர்), விஜய் மிஸ்ரா (அலகாபாத்) என, சமாஜ்வாடி சிங்கங்களுக்கும் பஞ்சமில்லை.

பகுஜன் சமாஜ் கட்சி:எதிர்க்கட்சியிலேயே இவ்வளவு எனும்போது, ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் சளைத்ததா என்ன? ராம்சேவக் படேல் (பதாவ்ன்), இந்திரபிரதாப் திவாரி (கொசோய்கஞ்ச்), மனோஜ் திவாரி (பிரதாப்கர்), ஹாஜி அலிம் (புலந்த்சர்), நூர் சலீம் ராணா (சர்த்தாவால்) என, ஏகப்பட்ட தாதாக்கள் தேர்தலில் மும்முரமாக உள்ளனர். இத்தனைக்கும், "கிரிமினல் பின்னணி கொண்ட பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு இம்முறை சீட் கொடுக்கவில்லை' என, மார்தட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மாயாவதி. கழித்தது போகவே இவ்வளவு என்றால், மொத்தமும் சேர்ந்தால் என்னவாகும்?

நம்மூரில் அமைதியின் உருவமாகத் திகழும் பா.ஜ.,வில் கூட ராதேஷ்யாம் குப்தா (பதேபூர்), லல்லு சிங் (அயோத்தி), சந்த்ராம் செங்கேர் (மாதவ்கர்), பாவன் சிங் (காட்ரா), உதய்பன் கார்வாரியா (அலகாபாத்) என, ஏராளமான தாதாக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். என்.ஆர்.எச்.எம்., ஊழல் புகழ் பாபுசிங் குஷ்வாகாவுக்கும் தாராள மனதோடு இடம் கொடுத்தது பா.ஜனதா. கட்சிக்குள்ளேயே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, சீட் கொடுக்காமல் விட்டுவிட்டது.இவர்கள் தவிர, அதீக் அகமது என்பவர், கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருந்து, 136 வழக்குகளில் (ஆம், 136) போலீசாரால், "தேடப்பட்டவர்.' புல்புர் பகுதியின் எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தேர்தலிலும், சிறையில் இருந்தபடியே போட்டியிடுகிறார், அப்னா தள் கட்சி சார்பாக.

ஒரு டஜன் வழக்குகள்:இதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான முன்னா பஜ்ரங்கியின் மீது, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அண்ணன் இப்போது திகார் சிறையில் இருந்தபடியே கட்சிப் பணியாற்றி வருகிறார்.சுத்தமான இமேஜ் இருப்பதாகச் சொல்லி களமிறங்கியிருக்கும், "பீஸ் பார்ட்டி'யில் கூட அகிலேஷ் சிங், ஜிதேந்திர சிங் பப்லூ போன்ற தாதாக்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

35 சதவீதம்கிரிமினல்கள் :கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் 35 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இதில் 30 சதவீதம் பேர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றம் சாட்டப்பட்டவர்கள். சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், சிறையில் இருந்தபடியே போட்டியிடுவது தான்.உ.பி., அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

சஸ்பெண்ட், வெளியேற்றத்துக்கு பஞ்சமில்லை: அனல் பறந்த கூட்டத்தொடர்

முந்தைய சட்டசபை கூட்டத்தொடர், ஆளுங்கட்சி மாநாடு போல இருந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

புதிய ஆட்சி அமைந்ததும், கடந்த ஆண்டு கவர்னர் உரை, பட்ஜெட் போன்றவற்றுக்காக சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அந்த தொடரில், தி.மு.க.,வினர் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்ற கட்சிகளை பொறுத்தவரை, எதிர்க்கட்சியான தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரி கட்சிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே பேசினர்.காங்., - பா.ம.க., கட்சியினர் கூட விமர்சித்து பேசவில்லை. இதனால், சட்டசபையில் பெரிய அளவில் குறுக்கீடுகளோ, கூச்சல், குழப்பமோ ஏற்படவில்லை. புதிதாக பொறுப்பேற்ற ஆளுங்கட்சியினரும், மற்ற கட்சியினரும், முதல்வரை பாராட்டி புகழ்மாலை பாடியதால், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் போல கூட்டத்தொடர் இருந்தது.

ஆனால், இந்த தொடர் துவங்குவதற்கு முன், உள்ளாட்சித் தேர்தலின் போது, கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டு, அ.தி.மு.க., தனித்து களமிறங்கியது. அப்போது முதல், கூட்டணியில் இருந்த கட்சிகள் அதிருப்தியில் காணப்பட்டன. அத்துடன், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டண உயர்வு போன்ற அறிவிப்புகள், ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்தது.இந்த சூழ்நிலையில், கவர்னர் உரையுடன் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க., வெளிநடப்பு செய்தது. மற்ற நாட்களில், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை விமர்சித்து பேசின. இதனால், ஒவ்வொருவரது பேச்சுக்கும் அமைச்சர்கள் எழுந்து பதிலளித்தவாறு இருந்தனர். சபையில் முதல்வர் இருந்த போதெல்லாம், ஒவ்வொரு விமர்சனத்துக்கும் குறுக்கிட்டு பதிலளித்தார்.

தி.மு.க.,வை பொறுத்தவரை, ஆரம்பமே அதிர்ச்சியாகத் துவங்கியது. சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜாவை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் தி.மு.க., இந்த தொடரை புறக்கணிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளிநடப்பு செய்த தி.மு.க.,வினர் மீண்டும் வந்து விவாதத்தில் கலந்து கொண்டனர்.இதனால், தி.மு.க.,வினர் பேசிய போதெல்லாம், சட்டசபையில் அனல் பறந்தது. ஒவ்வொரு வரிக்கும், அமைச்சர்கள் எழுந்து நீண்ட விளக்கம் அளித்தனர். தி.மு.க., தலைவரை யாராவது விமர்சித்து பேசினால், அக்கட்சியினர் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அடிக்கடி வெளியேற்றப்பட்டனர்.

அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., இனியும் நாம் மிகவும் அமைதியாக விமர்சித்தால், தி.மு.க.,வுக்கு தான் பெயர் கிடைக்கும் என்று கருதியது. இதனால், தே.மு.தி.க.,வும் ஆவேசத்தை துவக்கியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடியாக வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, விஜயகாந்த் சஸ்பெண்ட் வரை சென்றது.விஜயகாந்துக்கு ஆதரவாக, தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து வெளிநடப்பு செய்தன. இவற்றை எல்லாம் காங்., - பா.ம.க., கட்சிகள் வேடிக்கை பார்த்தன. தொடர்ந்து, தே.மு.தி.க.,வினர் கறுப்புச் சட்டை அணிந்து வந்தது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனால், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடருக்கும், இம்முறை நடந்த தொடருக்கும் பெரும் வித்தியாசம் காணப்பட்டது. சட்டசபை என்றால் அமளி இல்லாமலா என்ற எதிர்பார்ப்பை, இந்த தொடர் நிறைவேற்றியது. கடுமையான விவாதங்கள் இடம்பெறாத போதிலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது சட்டசபை தொடர். அடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், இதை விட அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் "பஞ்ச பாண்டவர்கள்' பாராமுகம்:சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் "பஞ்ச பாண்டவர்கள்' வெளிநடப்பு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர்களிடம் ஒற்றுமை உணர்வு இல்லாமல் இருப்பதாலும், ஆளுங்கட்சியினர் அதிருப்திக்கு ஆளாகி விடுவோமோ? என்ற காரணத்தாலும் சபைக்குள்ளே பாராமுகமாக அமர்ந்திருந்தனர் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக சட்டசபையில், காங்கிரஸ் கட்சியின் பஞ்ச பாண்டவர்களாக விளங்கும் கோபிநாத், பட்டுக்கோட்டை ரங்கராஜன், ஜான் ஜேக்கப், பிரின்ஸ், விஜயதாரணி ஆகியோரிடம் ஒற்றுமை உணர்வு நிலவவில்லை. சட்டசபைத் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர். துணைத் தலைவர் ரங்கராஜன், மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர். இதனால், அவர்கள் இருவரும் இரு துருவங்களாகச் செயல்படுகின்றனர். சபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விஜயதாரணியை தவிர மற்ற நான்கு எம்.எல்.ஏ.,க்களும் பேசினர். விஜயதாரணிக்கு நடந்து முடிந்த ஐந்து நாள் கூட்டத்தொடரில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்புள்ளதாக இரு கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயகாந்துக்கு ஆதரவாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் விஜயகாந்திற்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை. சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் காத்ததால், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் அவசரம் அவசரமா அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு தனி அந்தஸ்தை எல்லா விதத்திலும் பெறுகிறார்.ஆகவே, விஜயகாந்தை 10 நாட்கள் சபையை விட்டு நீக்கம் என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து, எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய ஜனநாயக கடமையை சபைக்குள் ஆற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் விஜயகாந்துக்கு, தமிழக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

அரசியலில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, அரசியலில் குதித்தார். காங்கிரசைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், இந்த மாதமும், அடுத்த மாதமும் ஏழு கட்டமாகசட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதில், முதல் கட்டமாக 55 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதே நேரத்தில், ஆறு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள மற்ற தொகுதிகளில், மாயாவதி, முலாயம் சிங், ராகுல் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அமேதி தொகுதியில், சோனியாவின் மகளான பிரியங்காவும் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.ராகுலுக்கு உதவ தயார் :இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவும் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தான் தீவிர அரசியலில் சேர ஆர்வமாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவப் போவதாகவும் கூறியுள்ளார்.அமேதி அருகே உள்ள ஜி.எஸ்.எம்., நகருக்கு நேற்று முன்தினம் இரவு, தன் மகளுடன் வந்த ராபர்ட் வதேரா, நேற்று காலை, கவுரி கஞ்ச் என்ற இடத்திலும், பின்னர் சலோன் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மக்கள்

விரும்பினால், நான் தேர்தலில்காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவரது மகளும் உடன் இருந்தார். அரசியலில் சேர ஆசை:பின்னர் நிருபர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா கூறியதாவது: போட்டியிடுவேன்.எனக்கு அரசியலில் சேர ஆர்வம் உள்ளது. ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு எந்த உதவியும் தேவை இல்லை என்றாலும், அவர்களின் குடும்ப உறுப்பினர் என்ற முறையில், ராகுல் தெரிவித்த கருத்துக்களை, இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக வந்துள்ளேன். ராகுலின் செய்தியை மூலை முடுக்கிற்கு எல்லாம் கொண்டு செல்வதன் மூலம், மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.பிரதமர் பதவி தொடர்பாக ராகுலை மையப்படுத்தி கூறும் விஷயங்கள் பற்றி, நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. பிரதமராவது தொடர்பான கருத்துக்களுக்கு ராகுல் தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு ராபர்ட் வதேரா கூறினார்
."பிரதமர் பதவி மீது ஆசையில்லை':உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வாரணாசியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக, ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனக்கு அந்த ஆசை இல்லை என, என் சகோதரி பிரியங்கா நேற்று(நேற்று முன்தினம்) கூறினார். அவர்

கூறியது தான் உண்மை. பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை; அது என் விருப்பமும்இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால், எனக்கு உ.பி., மாநிலத்தின் மீது தான் விருப்பம் உள்ளது. இந்த நாட்டில் உள்ள, குறிப்பிட்ட சிலமக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உ.பி.,யில் உள்ள, 1 சதவீத மக்களாவது என் மீது நம்பிக்கை வைத்திருப்பர் என எதிர்பார்க்கிறேன். இது தான் எனக்கு கிடைத்துள்ள ஒரே நன்மை.இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மிகக் குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும், மிகக் குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் கூட, ஏழை மக்களுக்காக போராடுவதை கைவிட மாட்டேன். எனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவதற்கு, நான்கு அல்லது ஐந்து பேரை அனுப்புவதால், நான் ஓடி விடுவேன் என நினைக்கின்றனர். அது நடக்காது.உ.பி.,யில் தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், நாங்கள் எந்த கட்சியுடனும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க மாட்டோம். ஏழைகளுடனும், சாதாரண மக்களுடனும் மட்டுமே கூட்டணி அமைப்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.