Search This Blog

Tuesday, June 5, 2012

போதிய நிதி இல்லாமல், சிந்துவெளி ஆய்வுகள் தேங்கும் நிலை ஏற்பட்டு, ஆய்வாளர்கள் கவலை அடைந்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே

சிந்துவெளி ஆராய்ச்சியில் கிடைத்த முத்திரைகள் அனைத்தையும் தொகுத்து, அவற்றின் குறியீடுகளை ஆய்வு செய்து, 1977ல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நூல் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 1977க்குப் பின் கிடைத்த முத்திரைகளைத் தொகுத்து, அவற்றின் புகைப்படங்கள் அடங்கிய நூல் ஒன்றை 2010ல், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா வெளியிட்டார்.உறுதி செய்யப்பட்டுள்ளதுதமிழகத்தில் கோவை மாவட்டம் சூலூர், செங்கல்பட்டு அருகே உள்ள சாணுர், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள செம்பியன் கண்டியூர் ஆகிய ஊர்களில், சிந்துவெளி காலத்தோடு ஒப்பிடக்கூடிய பொருள், அகழாய்வு மூலம் கிடைத்துள்ளது. இதுவரையில் நடந்த ஆராய்ச்சியின் மூலம், சிந்து வெளியில் திராவிடப் பண்பாடு தான் நிலவியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி தொடர வேண்டும். பல உண்மை விவரங்கள் வெளி உலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, திராவிட நாகரிகத்தின் அசைக்க முடியாத ஆதாரங்கள் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு, நிதி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் சிந்துவெளி ஆராய்ச்சிக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Monday, June 4, 2012

அரசுக்கு எதிராக சில சக்திகள் சதி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா

"காங்கிரசுக்கு எதிரான சில சக்திகளும், எதிர்க் கட்சிகளும் இணைந்து, மத்திய அரசு மீதும், பிரதமர் மீதும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இது, நமக்கு சோதனைக் காலம். இந்த சதியை முறியடிக்க வேண்டுமெனில், கோஷ்டி மோதலை கைவிட்டு, கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,'' என, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் சோனியா பேசினார். பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், கட்சித் தலைவர் சோனியா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். ஆதாரமில்லை: இதில், கட்சித் தலைவர் சோனியா, துவக்க உரையின் போது பேசியதாவது:மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும், காங்கிரசுக்கு எதிரான சக்திகளும், எதிர்க் கட்சிகளும் இணைந்து, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.ஜனநாயக அமைப்பில், ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது தான் எதிர்க் கட்சிகளின் பணி. ஆனால், சில சக்திகளும், இங்குள்ள எதிர்க் கட்சிகளும் செயல்படும் முறையை பார்த்தால், அரசுக்கு எதிராக, இவர்கள் சதி செய்வது போல் உள்ளது.நம் மீதான இந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்க, தீவிரமாக செயல்பட வேண்டும். தற்போது, சர்வதேச அளவில், பொருளாதார நெருக்கடி உள்ளது. இது, சாதாரண மக்களை பாதிக்கிறது. நம் நாடும், இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒத்துழைப்பு இல்லை:மத்திய அரசு செயல்படுத்தும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் இருந்து, போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.இது, சரியான ஜனநாயக நடைமுறை இல்லை. இந்தாண்டில், சில மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, 2014ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கு, இது தான் சரியான நேரம். சோதனை காலம்:கட்சியில் உள்ள அனைத்து தரப்பினரும், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கட்சியினர், தங்கள் திறமையின் பெரும் பகுதியை, கோஷ்டி மோதலுக்கும், தேவையற்ற விஷயங்களுக்கும் செலவிடுகின்றனர்.கட்சியின் வளர்ச்சிக்காக, இந்த திறமையை பயன்படுத்தினால், கட்சி இரண்டு மடங்கு வளர்ச்சியை எட்டி விடும். அரசியல் கட்சி என்று வந்து விட்டால், தாங்கள் சார்ந்துள்ள அமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, தங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு, யாரும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.இந்த தவறை உணராவிட்டால், மிகப் பெரிய விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். இது, நமக்கு சோதனையான நேரம். எனவே, மிகவும் எச்சரிக்கையுடனும், சவாலுடனும் பிரச்னைகளை எதிர்கொண்டு, சமாளிக்க வேண்டும். எந்த ஒரு சவாலான சூழலையும் எதிர்கொள்ளும் திறன், காங்கிரஸ் கட்சியினருக்கு உள்ளது.இவ்வாறு சோனியா பேசினார். தீர்மானம்:செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொண்டு வந்தார். இதில் முக்கியமாக, ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரத்தை, சோனியாவுக்கு அளிக்க வகை செய்யும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டது.நிலக்கரி முறைகேடு குறித்த பிரச்னையில், அன்னா ஹசாரே குழுவினரும், எதிர்க் கட்சிகளும், பிரதமர் மன்மோகன் சிங் மீது, குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், பிரதமருக்கு ஆதரவாக, காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியுள்ளது, பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன. "தினமும் பொய் பிரசாரம்' : செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தினமும், நம்ப முடியாத பொய் குற்றச்சாட்டுகளை, சிலர் கூறி வருகின்றனர். அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர்.வானைத் தொடும் அளவு தொகையிலான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதில், சிறிய அளவில் கூட உண்மை இல்லை. பொது வாழ்வில், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில், காங்கிரஸ் அரசு உறுதியுடன் உள்ளது.அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஊழலுக்கு எதிராக, நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை, இதை நிரூபித்துள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

Sunday, May 27, 2012

5வது ஐபிஎல் தொடரின் சாம்பியன் கொல்கத்தா

ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. 191 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடைசி வரை போராடி, மிக சிறப்பாக ஆடி அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் பிஸ்லா, காலிஸ் ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் ஜோடி அணிக்கு அதிரடி துவக்கத்தை அளித்தது. முதல் 10 ஓவர்களுக்கு விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் தவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ராஜத் பாட்டியா கை கொடுத்தார். முரளி விஜய் 32 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 42 ரன்களை எடுத்த நிலையில், பாட்டியா வீசிய பந்தை அடித்து ஆட அதை சாகிப் அல் ஹசன் அருமையாக கேட்ச் பிடித்து அவுட்டாகினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்து மைக்கேல் ஹஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். 38 பந்துகளில் அரைசதம் கடந்த மைக்கேல் ஹஸ்ஸி தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக ஆடிய சுரேஸ் ரெய்னா 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். மைக்கேல் ஹஸ்ஸி 43 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 54 ரன்கள் எடுத்த நிலையில் காலிஸ் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த கேப்டன் டோணி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சுரேஷ் ரெய்னா 38 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 73 ரன்கள் குவித்து, போட்டியின் கடைசி பந்தில் பிரட் லீயிடம் கேட்சாகி வெளியேறினார். கேப்டன் டோணி 14 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்து 190 ரன்களை குவித்தது. 191 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, துவக்க வீரர் கெளதம் கம்பிர் 2 ரன்கள் எடுத்து போல்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு மற்றொரு துவக்க வீரர் பிஸ்லா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 27 பந்துகளில் அரைசதம் கடந்த பிஸ்லா தொடர்ந்து அதிரடியாக ஆடினார். ஆனால் 48 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 89 ரன்களை குவித்த அவர், மார்கலின் பந்தில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு காலிஸ் பொறுமையாக ஆடி அரைசதம் கடக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய சுக்லா 3 ரன்களில் பிராவோ பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். சாகிப் அல் ஹசன் பொறுமையாக ஆடி அணியின் வெற்றிக்கு பாடுபட்டார். ஆனால் பொறுப்பாக ஆடி வந்த காலிஸ் 49 பந்துகளில் 1 சிக்ஸ், 7 பவுண்டரிகள் அடித்து ஜடேஜாவிடம் கேட்கி வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் சாகிப் அல் ஹசன், திவாரி ஜோடி பொறுப்பாக ஆடி அணியின் வெற்றியை உதவினார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திவாரி 2 பவுண்டரிகளை அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் சிக்ஸ்-ரெய்னா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா போட்டியில் 105 மீட்டர் கொண்ட சிக்ஸ் அடித்து அதிக தூரம் கொண்ட சிக்ஸ் அடித்த விருதை பெற்றார். ரைசிங் ஸ்டார் விருது: ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியாவில் வளரும் இளம்வீரராக அடையாளம் காணப்பட்ட மன்தீப் சிங்கிற்கு ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்பட்டது. ஆரஞ்சு நிற தொப்பி விருது: ஐபிஎல் 5 தொடரில் அதிகபட்ச ரன்களை சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்லுக்கு, ஆரஞ்சு நிற தொப்பி விருது அளிக்கப்பட்டது. கத்திரிப்பூ நிற தொப்பி விருது: தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மோனி மார்கலுக்கு, கத்திரிப்பூ நிற தொப்பி விருது வழங்கப்பட்டது. அவரது விருதை சகோதரர் ஆல்பி மார்கல் பெற்று கொண்டார். கார்பன் கமால் கேட்ச் விருது: ஐபிஎல் 5 தொடரிலேயே சிறப்பான கேட்ச் பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் டேவிட் ஹஸ்ஸிக்கு, கார்பன் காமல் கேட்ச் விருது வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் சிறப்பான கேட்ச் பிடித்த சாகிப் அல் ஹசனுக்கு விருது வழங்கப்பட்டது. மென்மையான ஆட்ட விருது: ஐபிஎல் 5 தொடரில் பங்கேற்ற போட்டிகளில் மென்மையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பேர் பிளே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கேப்டன் ராகுல் டிராவிட் பெற்று கொண்டார். ஆட்டநாயகன் விருது: இறுதிப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய பிஸ்லாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது: ஐபிஎல் 5 தொடரில் சிறப்பான பந்துவீச்சு மூலம் விக்கெட்களை வீழ்த்தி, எதிரணியின் ரன் வேகத்தை குறைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு கோல்டன் பிளேயர் விருது (தொடர் நாயகன் விருது) வழங்கப்பட்டது.

Friday, May 25, 2012

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா ! குழு: உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் ! உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ! குழு: உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா ! விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் ! உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ! யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ! ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா ! உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ! ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா !

Tuesday, April 10, 2012

ஆழ்துளை கிணறு போட்டு, இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்

வீட்டில் ஏகப்பட்ட ஆழ்துளை கிணறுகளைப் போட்டு, நிலத்தடி நீரை இனி இஷ்டம் போல உறிஞ்ச முடியாத நிலை உருவாகப் போகிறது. நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில், "தேசிய தண்ணீர் வாரம்' என்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதைத் துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:

அதிகம் வீணடிப்பு: குடிதண்ணீர், விவசாயம் என, இரண்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், நாளுக்கு நாள் பெருகி வரும் தண்ணீர் தேவை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கான தீர்வை கண்டறியும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலச்சுவான்தாரர்கள் ஆழ்துளை கிணறு (போர்வெல்) மூலமாக, தங்களது நிலங்களில் துளையிட்டு, எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும், எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. உற்பத்தி செலவைக் காட்டிலும் தண்ணீரும், மின்சாரமும் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. நியாயமான விலையில், இந்த இரண்டுமே விற்கப்படவில்லை. இதனால், இரண்டையும் மக்கள் அதிகமாக வீணடிக்கின்றனர். மக்கள் மத்தியில் அதிகப்படியாக வீண் செலவு ஆகக் கூடியவைகளாக மின்சாரமும், தண்ணீரும் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்கான முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது.

விரைவில் சட்டம்: நிலத்தடி நீரை பொது நலச் சொத்தாக மாற்றுவதற்கு சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. நிலத்தடி நீரை, நிலத்தின் உரிமையாளர்கள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களை எல்லாம், அரசே தீர்மானிக்கும் வகையில், அந்த சட்டம் இருக்கும்.

அனைவருக்கும் சொந்தம்: நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், முக்கிய அம்சங்கள் இடம் பெறவுள்ளன. நிலத்தடி நீர் ஆதாரங்கள் என்பவை குறிப்பிட்ட, ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது. இந்த நீர் ஆதாரங்கள், அனைத்து மக்களுக்குமே சொந்தம். அனைவருக்கும் பயன் அளிக்கூடியவை என்ற நிலை உருவாக்கப்படும். நிலத்தடி நீரை எல்லா மக்களுக்கும் சொந்தமாக்கும் வகையில்தான் புதிய சட்டம் இருக்கப் போகிறது. நிலத்தடி நீர் ஒழுங்கு முறை ஆணையங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்படும். தேசிய அளவிலும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Sunday, April 8, 2012

தமிழகத்தின் முதல் இயக்கம் காங்கிரஸ்: வாசன் விருப்பம்:

வைகோ, சீமான் போன்றவர்கள், காகிதப் புலிகள் என்பது, சிங்களவனுக்கு தெரியும். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்'' என இளங்கோவன் பேசினார்.

திருச்சி காங்கிரஸ் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:எதற்காக இவ்வளவு கூட்டம்? ஏன் இந்த கூட்டம்? நாம் எந்த இலக்கு, எந்த லட்சியத்தை நோக்கிச் செல்கிறோம்? என்ற கேள்வி, அனைத்து தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. 2016ம் ஆண்டு யார், எங்கே, எப்படி இருக்க வேண்டும்? என்பது, நமது மனதில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.சொல்ல வேண்டிய இடத்தில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் உள்ளனர். என் தலைவர் ராஜிவ் கூறியது போல, தி.மு.க., - அ.தி.மு.க., இருவரும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வையுங்கள்; எங்களை அடமானம் வைத்து விடாதீர்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.

நாம் சுயமரியாதையோடு, இரு கட்சிகள் செய்த தவறுகளை தட்டிக்கேட்டு, மக்கள் பிரச்னைகளை முன் வைத்துப் போராடினால் தான், நாம் மரியாதையாக இருக்க முடியும்.கூடங்குளம் ஆறு மாதம் செயல்படாததால், பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது மட்டுமல்லாமல், மாணவர்களின் படிப்பு வீணானது. ஏற்கனவே, சமச்சீர் கல்வி அமல்படுத்துகிறேன் என்ற பெயரில், நான்கு மாதம் படிப்பு வீணானது. மின்வெட்டால் மூன்று மாத காலம் மாணவர் படிப்பு வீணாகியிருக்கிறது.

இதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்கள் தான். ஓராண்டு படிப்பு வீணானதால், நாட்டின் வளர்ச்சி ஓராண்டு பின் தங்கிவிடும். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, எழுதிய மாணவர்களுக்கு, பத்திலிருந்து 20 மதிப்பெண்கள் அதிகமாக வழங்க வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.வைகோ, சீமான் போன்றவர்கள், காகிதப் புலிகள் என்பது, சிங்களவனுக்கு தெரியும். கள்ளத் தோணியில் சென்றாலும், அவர்களை சிங்களவன் அடிக்க மாட்டான். காங்கிரஸ் கட்சி நம்மை அழித்து ஒழித்துவிடும்; எதையும் சாதிக்கிற ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது என்பதால் தான் தாக்கினான்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

தமிழகத்தின் முதல் இயக்கம் காங்கிரஸ்: வாசன் விருப்பம்:

திருச்சியில் நடந்த காங் கிரஸ் பொதுக் கூட்டத்தில், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் பேசியதாவது:காங்கிரஸ் ஆட்சி இருக்கும், இருக்காது என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், குறிப்பாக மாற்றாந்தாய் மனப்பான்மையில்லாத அரசாக, காங்கிரஸ் இயங்குகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில், மத்திய தொகுப்பிலிருந்து, தமிழக அரசுக்கு, 21 ஆயிரத்து 338 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளில், 53 பட்ஜெட்டுகளை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது. அதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நாட்டின் வல்லரசாக மாற்றும் சக்தி, காங்கிரஸ் ஆட்சிக்குத் தான் உள்ளது.

இதை பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச்சென்று, தொண்டர்கள் உணர்த்த வேண்டும். வரும் காலத்தில் தமிழகத்தின் முதல் இயக்கமாக, காமராஜரின் கனவின் படி காங்கிரஸ் வர வேண்டும். மூப்பனாரின் வலிமையான தமிழகம், வளமையான பாரதம் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tuesday, March 6, 2012

உ.பி. தனிப்பெரும்பான்மையில் முலாயம்

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆட்சியைப் பிடித்தது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி மீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்கள் சமாஜவாதி கட்சிக்கு அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். முலாயம் சிங்தான் கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் என்று கட்சித் தலைவரும் அவருடைய மகனுமான அகிலேஷ் சிங் யாதவ் அறிவித்துவிட்டார்.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்கு 224 தொகுதிகள் கிடைத்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 79 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 47 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சிக்கு 9 இடங்களும் கிடைத்துள்ளன. இதர கட்சிகளுக்கு 15 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
பஞ்சாபில் எதிர்பாராத முடிவு: பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலிதளம், பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இது பெருத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த மாநிலத்தில் தங்கள் கட்சி வெற்றி உறுதி என்றே காங்கிரஸ் தலைவர்கள் பெரிதும் நம்பி வந்தனர். பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 46 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இப்படி ஒரே கட்சி அல்லது கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. பிரகாஷ் சிங் பாதல்தான் மீண்டும் முதல்வராக இருப்பார் என்று அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.
பஞ்சாபில் மொத்த இடங்கள் 117. சிரோமணி அகாலிதளம் - பாஜக கூட்டணி 68 இடங்களை வென்றுள்ளது. இதில் அகாலிதளத்துக்கு 56 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 12 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்தது 46. 3 இடங்களில் மற்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மணிப்பூரில் 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 42 இடங்களில் வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 7, தேசியவாத காங்கிரஸ் 1, லோக் ஜனசக்தி 1, நாகா மக்கள் முன்னணி 4 ஆகியவை பிற கட்சிகள். இக்கட்சிகளைத் தவிர மற்றவர்கள் பெற்ற இடங்கள் 5.
கோவாவில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்: 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா, மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கூட்டணி 24 இடங்களில் வென்றுள்ளன. இதில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்துள்ள இடங்கள் 21. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் மற்றவர்கள் 7 இடங்களிலும் வென்றுள்ளனர். கோவா மாநில முதலமைச்சர் திகம்பர் காமத் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.
உத்தரகண்டில் இழுபறி: 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 32 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா 31 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. உத்தரகண்ட் கிராந்தி தளம் கட்சிக்கு 1 இடம் கிடைத்திருக்கிறது. 3 சுயேச்சைகளும் வென்றுள்ளனர். கிராந்திதள உறுப்பினரும் 3 சுயேச்சைகளும் தங்களை ஆதரிப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால் முதலமைச்சர் கந்தூரி பேரவைத் தேர்தலில் தோற்றுவிட்டார்

பஞ்சாபில் பாஜகவுக்கு பெரும் சரிவு: சொந்த பலத்தால் தப்பிய அகாலிதளம்!

பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக கடந்த தேர்தலைவிட அதிகமான இடங்களில் தோற்றுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியில் அகாலிதளம் 48 இடங்களிலும் பாஜக 19 இடங்களிலும் வென்றிருந்தன. ஆனால், இந்த முறை பாஜக வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

அதிர்ஷ்டவசமாக அகாலிதளம் கடந்த தேர்தலை விட 8 இடங்களை கூடுதலாக வென்றதால் ஆட்சியைத் தக்க வைக்க முடிந்துள்ளது. அகாலிதளம் இம்முறை 56 இடங்களைப் பிடித்து, பாஜகவால் தனது கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் சரிவை ஈடுகட்டிவிட்டது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 59 இடங்கள் தேவை என்ற நிலையில் இந்தக் கூட்டணி 68 இடங்களைப் பிடித்துள்ளது.

பாஜகவைப் போல அகாலிதளமும் சரிந்திருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும்.

இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் வென்றதைவிட இம்முறை 2 இடங்களைக் கூடுதலாகப் பெற்று 46 இடங்களைப் பிடித்துள்ளது காங்கிரஸ்.

ஓட்டு சதவீதம்:

கடந்த தேர்தலில் 37.09 சதவீத வாக்குகள் வாங்கிய அகாலிதளம் இந்தமுறை 34.75 சதவீத வாக்குளைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 8.28 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதன் கூட்டணிக் கட்சியான பாஜக இம்முறை 7.13 சதவீத வாக்குகளையே வென்றுள்ளது.

தேர்தலில் தோற்றாலும் காங்கிரசின் வாக்கு சதவீதம் 40.90 சதவீதத்திலிருந்து கொஞ்சமே கொஞ்சம் அதிகரித்து 40.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

5 மாநிலங்களில் கட்சிகள் வென்ற இடங்கள் முழு விவரம்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 226 இடங்களிலும் (ஆட்சியமைக்க குறைந்தது 202 இடங்கள் தேவை), ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களிலும், பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 12 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் சமாஜ்வாடி கட்சி 129 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 126 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 6 இடங்களைப் பிடித்துள்ளது. பாஜக 4 இடங்களை இழந்துள்ளது.

உத்தர்கண்ட்டில்...

உத்தர்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் காங்கிரஸ் 32 இடங்களிலும் ஆளும் பாஜக 31 இடங்களிலும் வென்றுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும் சுயேச்சைகளும் சிறு கட்சிகளும் 4 இடங்களிலும் வென்றுள்ளன.

ஆட்சியைப் பிடிக்க 35 இடங்கள் தேவை. இதில் காங்கிரஸை மாயாவதி ஆதரிக்கக் கூடும் என்பதால் 35 இடங்களை அந்தக் கட்சி பிடிக்கவுள்ளது. சுயேச்சைகளுடனும் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது.

பஞ்சாபில்...

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன.

இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க 58 இடங்களே தேவை. அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.

கோவாவில்...

கோவாவில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வென்றுள்ளது.

மற்ற கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலத்தில் பாஜக 10 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை இழந்துள்ளது.

மணிப்பூரில்...

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 42 இடங்களில் வென்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதனால் இந்த மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 11 இடங்களிலும் வென்றுள்ளன.

பாஜகவுக்கு முட்டை தான் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 14 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 7 இடங்களும் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

Tuesday, February 14, 2012

தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை: சொல்கிறார் ராமதாஸ்



தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்தாலும், தி.மு.க., தேர்தல்களில் வெற்றி பெறாது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது,'' என மதுரையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடினார்.

மதுரையில் கட்சியின் "புதிய அரசியல் புதிய நம்பிக்கை' செயல் திட்டத்தை வெளியிட்டு ராமதாஸ் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு ஒரே தீர்வு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது தான். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது. ஜான்பாண்டியன் கட்சி போட்டியிட்டால் ஆதரிக்கும். வரும் லோக்சபா தேர்தலில் தேசிய, திராவிட கட்சிகளுடன் பா.ம.க.,வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். கடலுள்ளவரை, பூமியுள்ளவரை இந்நிலை தொடரும். திராவிடம் என பெயரில் துவங்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., ஒரு வேளை கூட்டணி வைத்தாலும், தேர்தல்களில் வெற்றி பெறாது. கடந்த தேர்தலில் தே.மு.தி.க.,வை கூட்டணியில் இழுக்க, தி.மு.க., எவ்வளவோ முயற்சித்தது. இப்போதும் முயற்சிக்கிறது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது. தே.மு.தி.க., கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடிந்தது. தனித்து நின்றிருந்தால், ரிஷிவந்தியத்தில் கூட விஜயகாந்த் தேறியிருக்க மாட்டார்

ஜெயலலிதாவின் நேர்காணல் குமுதம் இதழில்

செல்வி ஒரு விளக்கம் :



1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா! அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!

சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன?

“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!

ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தது..

Monday, February 6, 2012

தாதாக்களின் ராஜ்ஜியத்தில் உ.பி.

பிரிக்க முடியாதது எதுவோ என்றால், உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற சம்பல் கொள்ளைக்காரி பூலன்தேவியையே எம்.பி.,யாகத் தேர்ந்தெடுத்து, அழகு பார்த்த மாநிலம் உ.பி., எனும்போது, வேறு என்ன விவரம் வேண்டும்?

ஒரு பெண்ணாக இருந்ததால், பூலன்தேவி பிரபலமாகிவிட்டாரே தவிர, அவருக்குச் சற்றும் சளைக்காத தாதாக்கள், உ.பி., அரசியலில் உண்டு. கட்சி பாகுபாடு இல்லாமல், எல்லாருமே தாதாக்களுக்கு இடம் கொடுத்தாலும், அதிக இடஒதுக்கீடு வழங்கிய பெருமை, கட்சியினரால், "நேதாஜி' என்றழைக்கப்படும் முலாயம் சிங்கையே சேரும்.மொத்தம் ஏழு கட்டமாக நடக்கும் தேர்தலில், நாளை நடக்கும் முதல் கட்டத்தில் மட்டுமே 109 வேட்பாளர்கள், கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என, பட்டியலிடுகிறது, உத்தர பிரதேச தேர்தல் கண்காணிப்புக் குழு என்ற தனியார் தன்னார்வ நிறுவனம்.ஒவ்வொரு கட்சி சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள, "தலை'களின் பட்டியலைப் போட்டால் பக்கம் பத்தாது. சாம்பிளுக்கு மட்டும் சிலரைப் பார்க்கலாம்.

முதலில், புரட்சிப் புயல் ராகுலின் மேற்பார்வையிலான, காங்கிரஸ் கட்சி. ஜமானியா தொகுதியில் போட்டியிடும் கலாவதி பிந்த் என்ற பெண், முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தகுதி, அடியாட்களோடு சேர்ந்து ஒரு போலீஸ்காரரை கொன்ற வழக்கு.பாப்பன் ராஜ்பர் என்பவர் ராஸ்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்ட இவர் மீதுள்ள வழக்குகள் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், கொலை முயற்சி.பிந்த்ராவிலிருந்து போட்டியிடும் அஜய் ராய் மீது கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அண்ணன் இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்தவர். இப்படி, பக்கீர் சித்திக்கி (லக்னோ மத்தி), விஜய் துபே (கட்டா) என, ஏராளமான தாதாக்களுக்கு தஞ்சமளித்துள்ளது காங்கிரஸ்.

சமாஜ்வாடி கட்சி:இனி, சமாஜ்வாடி கட்சியின் முறை. கப்தான் சிங் ராஜ்புத் (சர்க்காரி), தன் சகோதரருடன் இணைந்து, மகுபா மற்றும் ஜாலோன் பகுதிகளில் ஒரு கொள்ளைக் கும்பலையே நடத்தி வந்தவர். இந்தக் கும்பல் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.திபாய் தொகுதியில் போட்டியிடும் பக்வான் சர்மா மூன்று முறை கைது செய்யப்பட்டவர். ஒன்று கொலை, அடுத்தது கற்பழிப்பு, மூன்றாவது அதிகாரிகள் கடத்தலுக்காக. அம்ரோகாவைச் சேர்ந்த மெகபூப் அலி மீது 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறை சென்ற பெருமை இவருக்கு உண்டு. இவர்கள் மட்டுமின்றி, அபய் சிங் (கொசோய்கஞ்ச்), மித்ராசென் யாதவ் (பிகாபூர்), விஜய் மிஸ்ரா (அலகாபாத்) என, சமாஜ்வாடி சிங்கங்களுக்கும் பஞ்சமில்லை.

பகுஜன் சமாஜ் கட்சி:எதிர்க்கட்சியிலேயே இவ்வளவு எனும்போது, ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் சளைத்ததா என்ன? ராம்சேவக் படேல் (பதாவ்ன்), இந்திரபிரதாப் திவாரி (கொசோய்கஞ்ச்), மனோஜ் திவாரி (பிரதாப்கர்), ஹாஜி அலிம் (புலந்த்சர்), நூர் சலீம் ராணா (சர்த்தாவால்) என, ஏகப்பட்ட தாதாக்கள் தேர்தலில் மும்முரமாக உள்ளனர். இத்தனைக்கும், "கிரிமினல் பின்னணி கொண்ட பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு இம்முறை சீட் கொடுக்கவில்லை' என, மார்தட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மாயாவதி. கழித்தது போகவே இவ்வளவு என்றால், மொத்தமும் சேர்ந்தால் என்னவாகும்?

நம்மூரில் அமைதியின் உருவமாகத் திகழும் பா.ஜ.,வில் கூட ராதேஷ்யாம் குப்தா (பதேபூர்), லல்லு சிங் (அயோத்தி), சந்த்ராம் செங்கேர் (மாதவ்கர்), பாவன் சிங் (காட்ரா), உதய்பன் கார்வாரியா (அலகாபாத்) என, ஏராளமான தாதாக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். என்.ஆர்.எச்.எம்., ஊழல் புகழ் பாபுசிங் குஷ்வாகாவுக்கும் தாராள மனதோடு இடம் கொடுத்தது பா.ஜனதா. கட்சிக்குள்ளேயே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, சீட் கொடுக்காமல் விட்டுவிட்டது.இவர்கள் தவிர, அதீக் அகமது என்பவர், கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருந்து, 136 வழக்குகளில் (ஆம், 136) போலீசாரால், "தேடப்பட்டவர்.' புல்புர் பகுதியின் எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தேர்தலிலும், சிறையில் இருந்தபடியே போட்டியிடுகிறார், அப்னா தள் கட்சி சார்பாக.

ஒரு டஜன் வழக்குகள்:இதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான முன்னா பஜ்ரங்கியின் மீது, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அண்ணன் இப்போது திகார் சிறையில் இருந்தபடியே கட்சிப் பணியாற்றி வருகிறார்.சுத்தமான இமேஜ் இருப்பதாகச் சொல்லி களமிறங்கியிருக்கும், "பீஸ் பார்ட்டி'யில் கூட அகிலேஷ் சிங், ஜிதேந்திர சிங் பப்லூ போன்ற தாதாக்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

35 சதவீதம்கிரிமினல்கள் :கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் 35 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இதில் 30 சதவீதம் பேர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றம் சாட்டப்பட்டவர்கள். சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், சிறையில் இருந்தபடியே போட்டியிடுவது தான்.உ.பி., அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

சஸ்பெண்ட், வெளியேற்றத்துக்கு பஞ்சமில்லை: அனல் பறந்த கூட்டத்தொடர்

முந்தைய சட்டசபை கூட்டத்தொடர், ஆளுங்கட்சி மாநாடு போல இருந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

புதிய ஆட்சி அமைந்ததும், கடந்த ஆண்டு கவர்னர் உரை, பட்ஜெட் போன்றவற்றுக்காக சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அந்த தொடரில், தி.மு.க.,வினர் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்ற கட்சிகளை பொறுத்தவரை, எதிர்க்கட்சியான தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரி கட்சிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே பேசினர்.காங்., - பா.ம.க., கட்சியினர் கூட விமர்சித்து பேசவில்லை. இதனால், சட்டசபையில் பெரிய அளவில் குறுக்கீடுகளோ, கூச்சல், குழப்பமோ ஏற்படவில்லை. புதிதாக பொறுப்பேற்ற ஆளுங்கட்சியினரும், மற்ற கட்சியினரும், முதல்வரை பாராட்டி புகழ்மாலை பாடியதால், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் போல கூட்டத்தொடர் இருந்தது.

ஆனால், இந்த தொடர் துவங்குவதற்கு முன், உள்ளாட்சித் தேர்தலின் போது, கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டு, அ.தி.மு.க., தனித்து களமிறங்கியது. அப்போது முதல், கூட்டணியில் இருந்த கட்சிகள் அதிருப்தியில் காணப்பட்டன. அத்துடன், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டண உயர்வு போன்ற அறிவிப்புகள், ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்தது.இந்த சூழ்நிலையில், கவர்னர் உரையுடன் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க., வெளிநடப்பு செய்தது. மற்ற நாட்களில், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை விமர்சித்து பேசின. இதனால், ஒவ்வொருவரது பேச்சுக்கும் அமைச்சர்கள் எழுந்து பதிலளித்தவாறு இருந்தனர். சபையில் முதல்வர் இருந்த போதெல்லாம், ஒவ்வொரு விமர்சனத்துக்கும் குறுக்கிட்டு பதிலளித்தார்.

தி.மு.க.,வை பொறுத்தவரை, ஆரம்பமே அதிர்ச்சியாகத் துவங்கியது. சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜாவை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் தி.மு.க., இந்த தொடரை புறக்கணிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளிநடப்பு செய்த தி.மு.க.,வினர் மீண்டும் வந்து விவாதத்தில் கலந்து கொண்டனர்.இதனால், தி.மு.க.,வினர் பேசிய போதெல்லாம், சட்டசபையில் அனல் பறந்தது. ஒவ்வொரு வரிக்கும், அமைச்சர்கள் எழுந்து நீண்ட விளக்கம் அளித்தனர். தி.மு.க., தலைவரை யாராவது விமர்சித்து பேசினால், அக்கட்சியினர் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அடிக்கடி வெளியேற்றப்பட்டனர்.

அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., இனியும் நாம் மிகவும் அமைதியாக விமர்சித்தால், தி.மு.க.,வுக்கு தான் பெயர் கிடைக்கும் என்று கருதியது. இதனால், தே.மு.தி.க.,வும் ஆவேசத்தை துவக்கியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடியாக வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, விஜயகாந்த் சஸ்பெண்ட் வரை சென்றது.விஜயகாந்துக்கு ஆதரவாக, தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து வெளிநடப்பு செய்தன. இவற்றை எல்லாம் காங்., - பா.ம.க., கட்சிகள் வேடிக்கை பார்த்தன. தொடர்ந்து, தே.மு.தி.க.,வினர் கறுப்புச் சட்டை அணிந்து வந்தது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனால், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடருக்கும், இம்முறை நடந்த தொடருக்கும் பெரும் வித்தியாசம் காணப்பட்டது. சட்டசபை என்றால் அமளி இல்லாமலா என்ற எதிர்பார்ப்பை, இந்த தொடர் நிறைவேற்றியது. கடுமையான விவாதங்கள் இடம்பெறாத போதிலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது சட்டசபை தொடர். அடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், இதை விட அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் "பஞ்ச பாண்டவர்கள்' பாராமுகம்:சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் "பஞ்ச பாண்டவர்கள்' வெளிநடப்பு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர்களிடம் ஒற்றுமை உணர்வு இல்லாமல் இருப்பதாலும், ஆளுங்கட்சியினர் அதிருப்திக்கு ஆளாகி விடுவோமோ? என்ற காரணத்தாலும் சபைக்குள்ளே பாராமுகமாக அமர்ந்திருந்தனர் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக சட்டசபையில், காங்கிரஸ் கட்சியின் பஞ்ச பாண்டவர்களாக விளங்கும் கோபிநாத், பட்டுக்கோட்டை ரங்கராஜன், ஜான் ஜேக்கப், பிரின்ஸ், விஜயதாரணி ஆகியோரிடம் ஒற்றுமை உணர்வு நிலவவில்லை. சட்டசபைத் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர். துணைத் தலைவர் ரங்கராஜன், மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர். இதனால், அவர்கள் இருவரும் இரு துருவங்களாகச் செயல்படுகின்றனர். சபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விஜயதாரணியை தவிர மற்ற நான்கு எம்.எல்.ஏ.,க்களும் பேசினர். விஜயதாரணிக்கு நடந்து முடிந்த ஐந்து நாள் கூட்டத்தொடரில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்புள்ளதாக இரு கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயகாந்துக்கு ஆதரவாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் விஜயகாந்திற்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை. சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் காத்ததால், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் அவசரம் அவசரமா அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு தனி அந்தஸ்தை எல்லா விதத்திலும் பெறுகிறார்.ஆகவே, விஜயகாந்தை 10 நாட்கள் சபையை விட்டு நீக்கம் என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து, எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய ஜனநாயக கடமையை சபைக்குள் ஆற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் விஜயகாந்துக்கு, தமிழக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

அரசியலில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, அரசியலில் குதித்தார். காங்கிரசைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், இந்த மாதமும், அடுத்த மாதமும் ஏழு கட்டமாகசட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதில், முதல் கட்டமாக 55 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதே நேரத்தில், ஆறு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள மற்ற தொகுதிகளில், மாயாவதி, முலாயம் சிங், ராகுல் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அமேதி தொகுதியில், சோனியாவின் மகளான பிரியங்காவும் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.ராகுலுக்கு உதவ தயார் :இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவும் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தான் தீவிர அரசியலில் சேர ஆர்வமாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவப் போவதாகவும் கூறியுள்ளார்.அமேதி அருகே உள்ள ஜி.எஸ்.எம்., நகருக்கு நேற்று முன்தினம் இரவு, தன் மகளுடன் வந்த ராபர்ட் வதேரா, நேற்று காலை, கவுரி கஞ்ச் என்ற இடத்திலும், பின்னர் சலோன் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மக்கள்

விரும்பினால், நான் தேர்தலில்காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவரது மகளும் உடன் இருந்தார். அரசியலில் சேர ஆசை:பின்னர் நிருபர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா கூறியதாவது: போட்டியிடுவேன்.எனக்கு அரசியலில் சேர ஆர்வம் உள்ளது. ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு எந்த உதவியும் தேவை இல்லை என்றாலும், அவர்களின் குடும்ப உறுப்பினர் என்ற முறையில், ராகுல் தெரிவித்த கருத்துக்களை, இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக வந்துள்ளேன். ராகுலின் செய்தியை மூலை முடுக்கிற்கு எல்லாம் கொண்டு செல்வதன் மூலம், மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.பிரதமர் பதவி தொடர்பாக ராகுலை மையப்படுத்தி கூறும் விஷயங்கள் பற்றி, நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. பிரதமராவது தொடர்பான கருத்துக்களுக்கு ராகுல் தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு ராபர்ட் வதேரா கூறினார்
."பிரதமர் பதவி மீது ஆசையில்லை':உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வாரணாசியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக, ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனக்கு அந்த ஆசை இல்லை என, என் சகோதரி பிரியங்கா நேற்று(நேற்று முன்தினம்) கூறினார். அவர்

கூறியது தான் உண்மை. பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை; அது என் விருப்பமும்இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால், எனக்கு உ.பி., மாநிலத்தின் மீது தான் விருப்பம் உள்ளது. இந்த நாட்டில் உள்ள, குறிப்பிட்ட சிலமக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உ.பி.,யில் உள்ள, 1 சதவீத மக்களாவது என் மீது நம்பிக்கை வைத்திருப்பர் என எதிர்பார்க்கிறேன். இது தான் எனக்கு கிடைத்துள்ள ஒரே நன்மை.இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மிகக் குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும், மிகக் குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் கூட, ஏழை மக்களுக்காக போராடுவதை கைவிட மாட்டேன். எனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவதற்கு, நான்கு அல்லது ஐந்து பேரை அனுப்புவதால், நான் ஓடி விடுவேன் என நினைக்கின்றனர். அது நடக்காது.உ.பி.,யில் தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், நாங்கள் எந்த கட்சியுடனும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க மாட்டோம். ஏழைகளுடனும், சாதாரண மக்களுடனும் மட்டுமே கூட்டணி அமைப்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.

Wednesday, January 18, 2012

மாற்றத்தை காணாமல் ஓய மாட்டேன்: ராகுல் சூளுரை




எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, மாற்றத்தைக் கொண்டு வரும் வரை நான் உத்தர பிரதேசத்தை விட்டு அகல்வதாக இல்லை,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தேர்தல் பிரசாரத்தில் சபதம் செய்தார். ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களையொட்டி, உத்தர பிரதேசத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல். அம்மாநிலத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் தன் கட்சியை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்.
அதற்காகவே, மற்ற மாநிலங்களை விட உ.பி.,யில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜாலோன் மாவட்டத்தில் உள்ள உரய், கால்பி, பங்க்ரா ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளிலும் நேற்று அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கால்பி தொகுதி, டக்கர்பாபா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கண்டது என்ன? : கடந்த 22 ஆண்டுகளாக உ.பி.,யில் காங்கிரஸ் அரசு இல்லை. பஞ்சரான சைக்கிளும் (சமாஜ்வாடி கட்சி சின்னம்), பணம் தின்னும் யானையும் (பகுஜன் சமாஜ்) தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தன. இத்தனை ஆண்டு ஆட்சியில் நீங்கள் கண்டது என்ன? கொலை, கொள்ளை, மோசடி, ஊழல் ஆகியவை மட்டும் தானே. இந்த 22 ஆண்டுகளில், நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. 10 ஆண்டுகளில் ஆந்திராவை மாற்றிக் காட்டி விட்டோம். ஐதராபாத்தை பற்றி, அமெரிக்காவில் பேசுகின்றனர். ஜான்சியை பற்றி யாருக்காவது தெரியுமா? பந்தல்கண்ட் பகுதியில் என்ன வளம் இல்லை. ஆனாலும் ஏன் வளர்ச்சியில்லை. காரணம், மாயாவதியோ, முலாயம் சிங்கோ உங்களிடம் வந்ததில்லை. உங்கள் குடிசையில் தங்கியதில்லை. கூழையும், குழாய் தண்ணீரையும் குடித்ததில்லை. ஆனால், நாங்கள் செய்திருக்கிறோம்.

பணம் விழுங்கும் யானை : இங்கிருக்கும் "மாஜிக்' யானை அரசு, மக்களுக்காக மத்திய அரசு
ஒதுக்கும் நிதியை எல்லாம் விழுங்கி விடுகிறது. மக்கள் பணத்தை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்பதில், காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. நீங்கள் ஒன்று சேர்ந்து மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அத்தகைய மாற்றத்தை கண்ணால் காணும் வரை, உத்தர பிரதேசத்தை விட்டு ஒருபோதும் அகல மாட்டான் இந்த ராகுல். ஐந்து ஆண்டுகள் அல்ல; 15 ஆண்டுகள் ஆனாலும் சரி, உத்தர பிரதேசத்தில் மாற்றத்தைக் கொண்டு வராமல் ஓய மாட்டேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

தமிழகத்திலிருந்து வந்ததால் கடும் சோதனை : ராகுல் பேசிய கால்பி, சாதாரண ஊர் தான். விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டி மாதிரி தான் இருக்கும். பாரதத்தை எழுதிய வேத வியாசர் பிறந்த ஊர் இது. பிரபல கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலன்தேவி பிறந்த ஊரும் இதுவே.
ஊரின் அளவை ஒப்பிடுகையில், திரண்ட கூட்டம் மிகப் பெரியது. 5,000 முதல் 7,000 பேர் வரை இருப்பர். இந்தப் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி தான் பலமாக இருக்கிறது. கால்பி தொகுதியில் காங்கிரசுக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான் போட்டி. தெளிவான இந்தியில் ராகுல் பேசிய பேச்சு, மக்களைக் கவர்ந்தது. பொதுக்கூட்டம் முடிந்து நீண்ட நேரத்துக்கு சாயா கடைகளிலும், தாபாக்களிலும் அவர் பேச்சை பற்றியே பேச்சாகவே இருந்தது. தந்தை ராஜிவை போலவே, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, தொண்டர்களோடு உற்சாகமாக கைகுலுக்கினார். ஒரு வார தாடியோடு காணப்பட்டவர், உற்சாகமாகவே இருந்தார். பா.ஜ.,வை லேசாகத் தான் தொட்டார். மாயாவதியையும், முலாயமையும் தான் போட்டு வாங்கிவிட்டார்.
மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேடைக்கு 20 அடி முன்னாலேயே தடுப்பு போடப்பட்டிருந்தது. தமிழகத்திலிருந்து வந்திருப்பதாக சொன்னதும், கேமரா, லென்ஸ், பை உள்ளிட்டவை கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.