Search This Blog

Wednesday, June 30, 2010

ஊழல் மலிந்த 13 நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கும் இடம்

உலகில் ஊழல் அதிகமாக பரவியுள்ள 13 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு நிர்வாகமும் இந்த நாடுகளில் மோசமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தோ - டச் திட்ட மேலாண்மை சொசைட்டி' என்ற அமைப்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும், ஊழல் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் என்ற அமைப்பு ஒரு அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கை, சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்டது.இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் ஊழல் அதிகமாக பரவியுள்ளது. கவுதமாலா, பராகுவே, கானா, கென்யா, பெரு, அர்ஜென்டினா, ரஷ்யா, ருமேனியா, அல்பேனியா, மல்டோவா, போலந்து, இந்தோனேசியா ஆகியவை இந்த பட்டியலில் உள்ள மற்ற நாடுகள். இந்த நாடுகளில் அரசின் நிர்வாக செயல்பாடும் மோசமாக உள்ளது.

இந்தியாவில் செயல்படும் அரசு சுகாதார மையங்களில் 24 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பொதுவான நோய்களுக்கு தேவையான மருந்துகள் இங்கு கிடைப்பது இல்லை. டாக்டர்கள் தங்கள் பணி நேரத்தில் இருப்பது இல்லை. போலி டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.இந்த 13 நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர், உள்ளூர் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பவர்களாக உள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நான் பதிவுலகத்திற்கு

நீண்ட நாட்களுக்கு பிறகு blog உலகத்துக்கு வருகிறேன். எல்லாரும் என்னை வாழ்த்தி வரவேற்கவேண்டுமாய் அன்புடன் நான் கேட்டுக் கொள்கிறேன்.


நான் என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை
. என்னைப் பற்றி நீங்கள் பிறகு தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் உங்களுடைய ஆதாரவை முன்பு போல் இனிமேலும் தருமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
.

சமூதாயத்திற்கு எங்கெங்கெல்லாம் கெடுதல் நேரிடுமோ அங்கே குரல் கொடுக்க நான் வருவேன்
.

நான் எல்லாம்.