Search This Blog

Sunday, December 19, 2010

மத்திய அரசுக்கு பாராட்டு

மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்டி காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத மோதல்கள் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் மத்திய அரசு, மத மோதல்களைத் தடுத்துள்ளதுடன், அதனை தூண்டி விடுபவர்களையும் தண்டித்துள்ளது. மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாபர் மசூதியை இடித்ததன் மூலம் அக்குற்றவாளிகள் அவமானகரமான செயலைச் செய்துள்ளனர். மசூதி இடிப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் தீர்மானத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி மீது தாக்கு: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது. குஜராத்தில் உள்ள நமது சகோதரர்கள் வெளியில் சொல்ல முடியாத துயரத்தை அடைந்து வருகின்றனர்.
அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது. இதனை பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது என்று காங்கிரஸ் மாநாட்டு தீர்மானம் கூறுகிறது.

No comments: