Search This Blog

Tuesday, December 28, 2010

சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைத்தேன்: ராஜா

சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டால் பதவி இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ., கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் விசாரணை நடத்தியது. அப்போது பல்வேறு தகவல்களை சி.பி.ஐ., திரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், ராஜா நேற்று சென்னை வந்தார். அவர் அளித்த பேட்டி: ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, சி.பி.ஐ., என்னிடம் கடந்த வாரம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய போது, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். சி.பி.ஐ., என்னிடம் நடத்திய விசாரணை குறித்து நான் எதுவும் கூற முடியாது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யோ மற்ற அமைப்புகளோ என்னை திரும்பவும் விசாரணைக்கு அழைத்தாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இவ்வாறு ராஜா கூறினார்.

அவரை விடாமல், கார் ஏறும் வரை நிருபர்கள் துரத்தி கேள்விகளை எழுப்பினர். அப்போதும் அசராத ராஜா, வேறு எந்த கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்'' என தெரிவித்தார். சி.பி.ஐ., விசாரணையின் போது ராஜா முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என, முன்னதாக செய்திகள் வெளியாயின. முன்தேதியிட்டு அவர் ஏன் அலைவரிசை ஒதுக்கீட்டை நிறுவனங்களுக்கு தந்தார் என்ற கேள்விக்கு பதில் சரியாக அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதே சமயம் சில நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு கேட்ட கேள்விகள் என்ன, அவற்றை ராஜா சந்தித்தது எப்படி என்னும் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

No comments: