Search This Blog

Sunday, December 19, 2010

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியவர்களுக்குத் தோல்வி: பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நம்முடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவர்கள் முந்தைய தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வென்றுள்ளனர். அல்லது முந்தைய தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், கூட்டணியை விட்டு விலகியவர்கள் தோல்வியையே தழுவியுள்ளனர்.
காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தை பாரதிய ஜனதா கட்சி முடக்கியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றார்.

No comments: