Search This Blog

Tuesday, December 28, 2010

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது: தங்கபாலு

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது; இந்த கூட்டணி நீடிக்கிறது,'' என, தமிழக காங்., தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

காங்., கட்சியின் 126வது ஆண்டு துவக்க விழா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. சேவாதளம் தொண்டர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை நடந்தது. கட்சிக் கொடியை தங்கபாலு ஏற்றி வைத்து, கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சுவர் கடிகாரத்தை தங்கபாலு பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தங்கபாலு அளித்த பேட்டி: சோனியா, ராகுல் வழியில் நடந்து ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவோம். உன்னதமான தமிழகத்தை படைப்போம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். சோனியா எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அவர் காட்டும் வழியில் தமிழக காங்கிரஸ் நடைபோடும். தமிழகத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கிறோம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா தெரிவித்தார். தி.மு.க., - காங்., வலுவான கூட்டணி, வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி தொடருகிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என ராகுல் கூறியுள்ளார். சோனியா மட்டுமே கூட்டணி குறித்து பேசுவார். உள்ளாட்சி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபடும். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். சட்டசபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். தேர்தல் கமிஷனுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

No comments: