Search This Blog

Sunday, December 19, 2010

மணிப்பூர் என்றால் இளக்காரமா?: முதல்வர் இபோபி சிங் கேள்வி

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது என்றாலும் மத்திய அமைச்சர்கள் அதை மதிப்பதில்லை என்று அந்த மாநில முதலமைச்சர் இபோபி சிங் வருத்தம் தெரிவித்தார்.
இதே கோரிக்கையை மகாராஷ்டிரமோ மேற்கு வங்கமோ வைத்திருந்தால் உடனே நடவடிக்கை எடுத்திருப்பீர்கள், இல்லையென்றால் அந்த மாநிலங்களே பற்றி எரியும், மணிப்பூர் என்பதால் அலட்சியமாக இருக்கிறீர்கள் என்று சற்று காட்டமாகவே காங்கிரஸ் மாநாட்டில் பேசினார் இபோபி சிங்.
மணிப்பூர் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் போன்றவற்றை இருப்புவைக்க இப்போதுள்ள இடம் போதவில்லை. மாநிலத்தின் 13 நாள் தேவைகளுக்கு மட்டும்தான் இடம் இருக்கிறது.
புதிய சேமிப்புதொட்டி கட்ட மாநில அரசு இடம் கொடுத்தும்கூட மத்திய அரசும் பெட்ரோலிய நிறுவனங்களும் முன்வராததால் பெரிய தொட்டிகட்ட முடியாமல் இருக்கிறது.
காங்கிரஸ் மாநாட்டில் ஒரு காங்கிரஸ் முதல்வரே மத்திய அரசைக் கண்டித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments: