Search This Blog

Wednesday, December 29, 2010

பா.ம.க., தயவில்லாமல் இருகட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது: ராமதாஸ் பேச்சு

பா.ம.க., தயவில்லாமல் இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் சட்டசபை தொகுதிக்குப்பட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க., தற்போது கட்சியை வலுப்படுத்தும் நிலையிலும், திசை மாறிச் சென்ற இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. பா.ம.க., தயவில்லாமல் இரண்டு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. பா.ம.க.,வின் இலக்கு இந்த சட்டசபை தேர்தலில் இல்லை. அடுத்த சட்டசபை தேர்தலில் தான் ஆட்சியை பிடிக்கும். பா.ம.க., தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவதாக கூறுகின்ற கட்சிகள் எதுவும் ஒரே அணியில் இருந்ததில்லை. கூட்டணி மாறுவது குறித்து எந்த கட்சி எப்போது முடிவெடுக்கும் என்று கூற முடியாது.

கிராமத்து இளைஞர்கள், அந்த கிராம மக்களின் பிரச்னைகளை கையிலெடுத்து தீர்வு காண வேண்டும். தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். ஏழைகள் கூட எம்.எல்.ஏ., ஆகும் நிலை உருவாக வேண்டும். கல்வியை மேம்படுத்தவும், விவசாயத்தை மேம்படுத்தவும், சுகாதார வசதி கிடைக்கவும், கிராம இளைஞர்கள் அதற்காக பாடுபட முன்வர வேண்டும். பொங்கலுக்கு பின் பா.ம.க., யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

No comments: