Search This Blog

Friday, December 17, 2010

தி.மு.க.,வை கழற்றி விட காங்., திட்டம் :மாஜி அமைச்சர் செம்மலை ஆரூடம்

: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தைக் கொண்டு தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போடலாம் என மாஜி அமைச்சர் செம்மலை பேசினார்.


கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் குறிஞ்சிப்பாடியில் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாஜி அமைச்சர் செம்மலை பேசியதாவது:சிறிய அளவில் செ#யப்படும் ஊழலில் அதிக நபர்கள் கைது செய்யப்படும் நிலை உள்ளது. ஆனால், 1,76,379 கோடியில் உலகிலே மிகப் பெரிய ஊழலாக பேசப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலை அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சரவை, பிரதமர், சட்டத்துறை, டிராஸ் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்காமல் அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளித்துள்ளனர். இதில் ராஜாவின் பினாமிகளுக்கு 6 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

ராஜா பங்குதாரராக உள்ள ஸ்வாங் கம்பெனியில் அனுமதி கொடுத்து அந்த லைசென்சை நார்வே கம்பெனிக்கு விற்றதன் மூலம் ராஜா 16 ஆயிரத்து 40 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். கனிமொழியும் தனக்கு ஒதுக்கிய பங்கை விற்றதன் மூலம் 16 ஆயிரத்து 500 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். சாதாரண மக்கள் வங்கியில் கடன் கேட்டால் பல ஆவணங்களை கேட்கும் தேசிய வங்கிகள் இந்த லைசென்ஸ் மீது 26 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளது.தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு பட்ஜெட் போடுவதற்கு 60 ஆயிரம் கோடி ஆகிறது. இந்த ஊழல் பணத்தை வைத்து தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போடலாம். இந்த ஊழலில் இருந்து காங்கிரஸ் தப்பித்துக் கொள்ள, கூடிய விரைவில் தி.மு.க.,வை கழற்றி விட திட்டம் போட்டுள்ளது.இவ்வாறு மாஜி அமைச்சர் செம்மலை பேசினார்.

No comments: