Search This Blog

Wednesday, December 22, 2010

தமிழ்நாட்டில் காங். ஆட்சியை பிடிக்க உழைக்க வேண்டும்: சென்னையில் ராகுல்காந்தி பேச்சு


தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி இன்று சென்னை வந்தார். காலை 9.58 மணிக்கு அவர் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

அவரை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 56 தலைவர்கள் சால்வை கொடுத்து வர வேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காலை 10.20 மணிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை வானகரம் புறப்பட்டார்.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபம் அருகே ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10.35 மணிக்கு ராகுல்காந்தி வானகரம் வந்தார். ஹெலிபேடு தளத்தில் இருந்து அவரை அழைத்துச் செல்லகார் தயாராக நின்றது. ஆனால் அவர் அதில் ஏறாமல் திருமண மண்டபத்துக்கு நடந்தே சென்றார்.

திருமண மண்டபத்துக்குள் நுழைந்ததும் நிர்வாகிகள் அவரை கைதட்டி வரவேற்ற னர். “நடப்போம் நடப்போம் ராகுல் வழியில் நடப்போம். அமைப்போம் அமைப்போம் காமராஜர் ஆட்சி அமைப்போம்” என்று கோஷம் எழுப்பினார்கள்.

அதன் பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் 8 பாராளு மன்ற தொகுதிகளான வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும் புதூர், வேலூர், அரக்கோ ணம் பாராளுமன்ற தொகுதி யைச்சேர்ந்த தேர்ந்தெடுக்கப் பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜூசத்வே, தமிழக பொறுப்பாளர் பிரியம்வர்சிங், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜிதேந்தர்சிங் எம்.பி., தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் பேசினார்கள்.

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மத்திய சென்னை ராம்குமார், தென் சென்னை ஜேம்ஸ் பிரகாஷ், வடசென்னை ஆனந்த், வேலூர் பழனி, அரக்கோணம் ராஜேஷ், ஸ்ரீபெரும்புதூர் அருவிபாபு, திருவள்ளூர் தர்மபிரகாஷ், காஞ்சீபுரம் புருஷோத்தமன், துணை தலைவர்கள் ஆர்.வி. ரஞ்சித் குமார், வடசென்னை சுரேஷ், பொதுச்செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வன், அனுராதா அதி, கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற கிராம பஞ்சாயத்து தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதா வது:-

நடந்து முடிந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் என்பது வரலாற்று திருப்பு முனை என பணிவோடு கூறிக்கொள்கிறேன். இளைஞர் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னைப் பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர்களின் பணி மிக முக்கியமானது. அவர்கள் மக்களோடு ஒன்றி பழகினால் கட்சி மேலும் வலுவடையும். காங்கிரசில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

இங்கே பஞ்சாயத்து அளவில் பெண்களும் வந்துள்ளனர். அவர்களை வர வேற்கிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் காங்கிரசில் இளைஞர்கள் முன்னிலைப் படுத்துப்படுவதை காண்கிறேன். என்னைப்பார்த்து தற்போது நிறைய பேர் கேட்பது என்னவென்றால் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரசில் இளைஞர்களை எப்படி ஈர்த்தீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு நீங்கள்தான் காரணம்.

எதிர்காலத்தில் வலிமையான இந்தியா உருவாக இளைய தலைமுறையை உருவாக்கினால் மட்டுமே முடியும். காங்கிரசின் கதவு இளைஞர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று எங்குபார்த்தாலும் காங்கிரசில் இளைஞர்களை பார்க்க முடிகிறது. இளைஞர்களை காங்கிரசில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களின் கருத்தை கேட்டு வாய்ப்பு வழங்கவேண்டும். மதிப்பும் கொடுக்க வேண்டும். இளைஞர் காங்கிரசாரின் பங்கு ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தையும் சக்தி வாய்ந்த தாக மாற்ற வேண்டும். அப் போதுதான் காங்கிரஸ் வளரும்.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருகிறது. இது முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு முக்கிய கடமை, பொறுப்பு உள்ளது. நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றியை பெற முடியும். இந்த தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும். அதில் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு அதிகவாய்ப்பு வழங்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் அதிகம் பங்கேற்று வெற்றி பெற்றால் உங்கள் பணி சிறப்பான தாக அமையும். கட்சிக்கும் அடித்தளம் சிறப்பாக அமையும். தமிழக மக்கள் மீது நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். தமிழக மக்கள் ஒரு நிலைப் பாட்டை எடுப்பதாக இருந்தால் அது நல்லதாக இருக்கும். இங்கே நான் உங்களை வாழ்த்துகிறேன்.

முக்கியமான கருத்தையும் சொல்கிறேன். தமிழக காங்கிரசில் இளைஞர்களுக்காக கதவுதிறந்தே உள்ளது. காங்கிரசில் இளைஞர்கள் இணைய வேண்டும். அப்போதுதான் இளைஞர் காங்கிரஸ் அதற்கான வளர்ச்சி பாதையில் செல்லும். அந்த நம்பிக்கையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அதன் மூலம் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்றும் எண்ணுகிறேன்.

ஒவ்வொரு இளைஞர் காங்கிரசாரின் உழைப்பு அவரை மதிப்புடையதாக ஆக்கும். உண்மையான உழைப்பு என்பது அது எந்த அமைப்பு தலைவராக இருந்தாலும், மக்களுடன் எந்த அளவுக்கு ஒன்றி போகிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. எதிர்கால தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை எங்கிருந்து வரவேண்டும் என்றால் அது இளைஞர் காங்கிரசின் மூலமாகவும் வர வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் இது போதாது. அகில இந்திய அளவிலும் நீங்கள் பதவிக்கு வரவேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை நாம் எடுக்கும் முயற்சி கொஞ்சமல்ல. 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் காங் கிரஸ் ஆட்சி இல்லை. இங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உழைப்பு அதிகம் தேவை. இதற்கான சவால்களை எதிர் கொள்ளவேண்டும். அது உங்கள் கையில்தான் உள்ளது. நாம் வருங்காலத்தில் ஆட்சியைபிடிக்க முடியும். எதிர்காலத்தில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த இங்குள்ள யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் பதவியை அடைய முடியும்.

வருங்காலத்தில் முதல்வராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. இதற்கு நாம் நிறைய உழைக்க வேண்டும். இதற்காக மெதுவாக முயற்சி எடுத்தாலும் கவலைப்படக் கூடாது. இலக்கை அடைய தொடர்ந்து செயல்பட வேண்டும். 6 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். பதவியை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன். நாம் மக்க ளோடு ஒன்றி பழக வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்ற முடிந்த அளவு சேவை செய்ய வேண்டும். எனவே மக்களோடு ஒன்றிப் பழகுங்கள். மக்கள் ஆதரிக்கும் தலைமைதான் நீடிக்கும்

இந்த முயற்சியை உருவாக்க சிலகாலம் ஆகலாம். ஆனால் நாம் உறுதியாக வெற்றி கொள்வோம். பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்றால் அடுத்து சட்டசபை, பாராளுமன்றம் என்று முன்னேற முடியும். இன்று காங்கிரசுக்கு புதிய சக்தி பிறந்துள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் மிகப் பெரிய சக்தியை எதிர்பார்க்க முடியும். அதை உங்கள் மூலம் காண்கிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

No comments: