Search This Blog

Wednesday, September 8, 2010

திராவிட கட்சிகளுக்கு காங்கிரஸ் சளைத்தது அல்ல: கார்த்தி சிதம்பரம்

திராவிட கட்சிகளுக்கு காங்கிரஸ் சளைத்தது அல்ல,'' என அகில இந்திய காங்., உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தேனி மாவட்ட சேவாதள ஆலோசனைக்கூட்டம் கம்பத்தில் நடந்தது. கார்த்திக்சிதம்பரம் பேசுகையில், ""மதுரை விமான நிலையம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தால் திறக்கப்பட உள்ளது,'' என்றார்.


பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; காங்கிரசார் அதிக அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை கூற மக்களை சந்திக்க வேண்டும். கூட்டணியில் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது என் நிலைப்பாடு. தி.மு.க.,- காங்., கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தொடரும். 
இளங்கோவன் கருத்துக்களில் தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து, நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நான் அகில இந்திய காங்., உறுப்பினராக உள்ளேன். கம்பத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை. 
பிரமாண்டத்தை மக்கள் விரும்புகின்றனர். காங்கிரசாலும் பிரமாண்டத்தை காட்ட முடியும். திராவிட கட்சிகளுக்கு காங்., சளைத்தது அல்ல. ராகுல் தமிழகம் வரும் போது, முதல்வர் கருணாநிதியை சந்திக்காமல் செல்வதாக கூறுகின்றனர். அவர் உள்கட்சி பிரச்னைகளுக்காக தமிழகம் வருகிறார். எனவே தான் கருணாநிதியை சந்திக்கவில்லை,

No comments: