Search This Blog

Thursday, October 21, 2010

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள்




மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள்

திட்டம் 1  : இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் ( IAY ) இந்த                 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1800 கோடி.
நோக்கம்  : மத்திய அரசின் இந்த திட்டம், கிராமப்புறத்திலிருக்கும் குடிசைகள் மற்றும் தற்காலிக வீடுகள் அனைத்தும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்ட ( Single Bed Room, Kitchen, Hall, Bathroom மற்றும் Portico ) கட்டிடமாக மாற்றித்தருவதே இதன் நோக்கமாகும். இதன் கட்டுமானச் செல்வில் 75% மத்திய அரசின் பங்காக தரப்படுகின்றது.

திட்டம் 2  : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கித் திட்டம் (NABARD ) இந்த ஆண்டிற்காண நிதி ஒதுக்கீடு ரூ.4,500 கோடி.
நோக்கம்  : இந்திய அரசின் பாரத் நிர்மான் திட்டத்தின் முதல் அங்கமான கிராமப்புற நீர்ப்பாசன வசதிக்கு உதவிடவே ( NABARD )  வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு அளிக்கப்படும் கடனுதவிகளுக்கு, மத்திய அரசே நேரடியாகவே நிதி உதவி செய்கிறது.

திட்டம் 3  : பிரதான் மந்திரி கிராமின் சதக்யோஜனா திட்டம்          (PMGSY )  நிதி ஒதுக்கீடு ரூ.30,737 கோடி.
நோக்கம்  :  பருவ காலங்களில் ஏற்படும் இயற்கை தாக்கங்களை எதிர்கொண்டிடும் வலுவான சாலைகளை கிராமங்களில் அமைத்திடுவது. மத்திய அரசே இதற்கு முழுவதுமாக நிதி ஆதாரம் அளிக்கிறது.

திட்டம் 4  : ஊரக உள்கட்டமைப்பு பணிகள நிறைவேற்றிடும் திட்டம் ( Bharat Nirman ) நிதி ஒதுக்கீடு ரூ. 1,72,000 கோடி.
நோக்கம்  : கிராமப்புறத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேன்மைபடுத்துவது, சாலைகளை நன்கு சீரமைப்பது (PMGSY) -ம் இதைச் சேர்ந்ததே. நல்ல குடிநீர் வசதி அமைத்து தருவது, காங்கிரீட் வீடுகள் கட்டித் தருவது. (IAY இதைச் சேர்ந்தது) தொலைபேசி வசதி ஏற்படுத்தி தருவது. மின்வசதி ஏற்படுத்தி தருவது - ஆகியவை. இவை அனைத்தும் ஒரு கிராமத்திற்கு கிடைத்திருந்தால் அதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு தான்.

திட்டம் 5  : முழு சுகாதாரதிட்டம் ( Total Sanitation Campaign - TSC ) நிதி ஒதுக்கீடு ரூ.5,100 கோடி.
நோக்கம்  :  பொதுவிடங்கள் மாசுபடுதலை தடுத்தல். கிராமங்களில் கழிவரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மொத்த செலவில் மத்திய அரசு 75% ஏற்றுக் கொண்டிருக்கிறது.

திட்டம் 6  : பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மான்யத் திட்டம் ( BRGF).
நோக்கம்  : நாட்டில் சில பகுதிகள் மிகவும் பிந்தங்கியதாக இருக்கின்றன அவற்றை முன்னேற்றிட மான்யத்தொகை அளிக்கப்படுகிறது. மாநில அர்சு எதை பிற்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கிறதோ அந்தப் பகுதிக்கு இந்த நிதி முழுவதுமாக செலவிடப்படுகின்றது.

திட்டம் 7  : சர்வ சிக்‌ஷா அபிக்ஞான் (SSA) நிதி ஒதுக்கீடு ரூ. 60,000 கோடி.
நோக்கம்  : அனைத்து சிறுவர்களும் பள்ளிக்கு சென்றிட வேண்டும். இதன் மூலம் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் செய்துத் தரப்படுகிறது. இது முழுமையாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலமாக நிறைவேற்றிடும் திட்டமாகும்.

திட்டம் 8  : மதிய உணவுத் திட்டம் (MDMS) நிதி ஒதுக்கீடு ரூ. 33000 கோடி.
நோக்கம்  : பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சூடான நன்கு சமைக்கப்பட்ட சத்துணவு அளித்திட வேண்டும். இது  பெருந்தலைவர் காமராசர் வழிகாட்டி அமைத்திட்ட திட்டமாகும். இதன் மூலம் 11.74 கோடி  மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். இதற்குரிய. அத்தனை செலவினையும் மத்திய அரசே ஏற்கிறது.

திட்டம் 9  : ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் (ICDS) நிதி ஒதுக்கீடு ரூ.33,000 கோடி.
நோக்கம்  : 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றை குறைத்திடுவதற்காகவும், அவர்களை அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவர்களுக்கு தற்காப்பு ஊசிகள் போட்டிடவும், அவர்களுக்கு சத்தான உணவினை ஊட்டிடவும் ஏற்பாடு செய்துடும் இத்திட்டம் மிகவும் பெரிய திட்டமாகும். இதற்காக 12,43 கோடி அங்கன்வாடி கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 20 கோடி குழந்தைகள் (0-6 வயது வரை) பயன் பெற்றுள்ளனர்.

திட்டம் 10  : தேசிய ஊரக உடல் நலத்திட்டம் (NRHM) நிதி ஒதுக்கீடு ரூ.22,000 கோடி.
நோக்கம்  : 7 வருடங்களில் கிராமப்புறங்கள் அனைத்திலும் நல்லதோர் உடல் நலத்திட்டத்தை அமுல் செய்திட முனையும்  திட்டம் கிராமப் புறங்களிலிருக்கும் மக்கள் தொகை பெருக்கம், தொத்து வியாதிகள், இயற்கை முரண்பாடுகள் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய சீரழிவுகளை எதிர்கொள்கிறது இத்திட்டம்.
கிராமப்புறாந்தோறும் தாய்சேய் மரணத்தை தடுத்திடவும் அதற்குரிய மருத்துவர்களை தயாரித்திடவும், அவர்களுக்குரிய கட்டமைப்புகளை ஏற்படுத்திடவும், இத்திட்டம் முனைகிறது. ஒரு கிராமத்திற்கு ஒரு அனுமதிக்கப்பட்ட சமூக நல மருத்துவ சேவையாளர் (Accredited Social Health  Activist - ASHA ) என்ற விகிதத்தில் மொத்தம் 6.47 லட்சம் ASHA -க்கள் இதற்காக நியமிக்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய மருத்துவப் பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இதுவரை, மத்திய அரசு ரூ.31,000 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கியுள்ளது.


திட்டம் 11  : மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிட்டம் ( MGNREGS).
நோக்கம்  : கிராமப்புறத்தில் வாழும் ஏழை மக்களுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் அளித்திட வேண்டும் இதனை காங்கிரஸ் அரசின் சாதனைத் திட்டம் எனக்கூறலாம். இதனை முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பவர் அன்னை சோனியாகாந்தியே. இதன் பெருமையனைத்தும் அவரையே சாரும். இத்திட்டத்திற்காக ஆண்டு தோறும் சுமர் ரூ.45,000 கோடி செல்விடப்பட்டுள்ளது. இதில் 90% செல்வினங்களை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.  இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அவர்களது கிராமத்திலேயே வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தவறுகள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவருக்க்ம் பயோ மெட்ரிக் கார்டு வழங்கி கணினி மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர்.

திட்டம் 12  : மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் (WSHG)
நோக்கம்  : கிராமத்தில் வாழும் பெண்கள் தாங்களே சுயமாக சம்பாத்யம் செய்திடுமளவில் சிறுதொழிலில் ஈடுபடுவதற்கு நிதிவசதி செய்து கொடுப்பது. மகளிர் செய்திடும் சிறுதொழில்களுக்கு கடனுதவி செய்வதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே சுமார் 80% அளவிற்கு கடனுதவி வழங்குகின்றன.

நன்கு கூர்ந்து கவனித்தால் மேற்குறிப்பிட்ட  12 திட்டங்களும், கிராம வளர்ச்சிக்காகவே ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரியும். இதற்குரிய நிதி ஆதாரத்தின் மிகப்பெரும் பங்கினை மத்திய அரசே அளிக்கிறது என்பது நன்கு விளங்கிடும். இத்திட்டத்தை நிறைவேற்றிடும் பொறுப்பு முழுக்க முழுக்க கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக கொடுக்கிறது. இதனை இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தெருமுனைப் பிரச்சாரத்தின் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமாகவும் தெரியப்படுத்திட வேண்ட்ம்.

மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள்:

ஜவர்கலால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் (JNNURM)

  நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்களுக்கு வேண்டிய சாலை, போக்குவரத்து, குடிநீர், வடிகால், மின்வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புக்களை அமைத்துத் தருதல், நிதி ஒதுக்கீடு ரூ.7,500 கோடி.

    இந்தியாவிலேயே நகர்ப்புறம் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். சுமார் 40 சதவிகிதம் பகுதிகள் நகர்ப்புறமாக இருக்கின்றன எனவே JNNURM-ல் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கே செலவிடப்பட்டிருக்கிறது. நகர பூங்காக்கள், மேம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், புதிதாக பேருந்துகளை சேர்த்தல் ஆகியவை தமிழ்நாட்டில் அதிகமாகச் செய்ல்படுத்தப் பட்டிருக்கின்றன. இவையாவும் மத்திய அரசு அளித்திடும் உதவி மூலம் தான் நடைபெறுகிறது.

ராஜீவ் காந்தி அவாஸ்யோஜனா (RAY) :

நகர்ப்புற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல், நிதி ஒதுக்கீடு ரூ.1,000 கோடி.

108 அவசர மருத்துவ உதவித்திட்டம் :
   வயது முதிர்ந்த மற்றும் இயலா ஏழை மக்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால், 108க்கு போன் செய்தால் அவசர மருத்துவ வசதி கிடைக்கும். இதற்கான நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
  இத்திட்டத்தின் வழியாக இதுவரை 2,30,000 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். 12,400 நோயாளிகள் மிக ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். 30,000 பிரசவங்கள் நடைபெற்று உள்ளன.

கல்விக்கடன் திட்டம்
 
  +2 படிக்கும் மாணவ, மாணவிகள் முதல் பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், நிர்வாகம், கணினி, CA உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகின்றன. தற்போது கல்விக்கடனுக்கு வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள்து.
    உயர்கல்வி பயிலும் 19.41 லட்சம் மாணவர்களுக்கு ரூ.35 ஆயிரத்து 196 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 4 லட்சத்திற்கும் உட்பட்ட கடன் பெறுபவர்களுக்கு வட்டியில்லா கடன், இதற்கு முன்பாக மாணவர்கள் கடன் பெற்று வட்டி கட்டியிருந்தால் அந்த வட்டித் தொகை திருப்பி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வுத்திட்டம்:

 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதம்ரூ.200 உதவித்தொகை மத்திய அரசு வழங்குகின்றது.

சிறுபான்மையினர் நலத்திட்டம் :

     சிறுபான்மையின் மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையும் வகையில் பிரதமரின் புதிய 15 அம்ச திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. ( சச்சார் கமிட்டி அறிக்கை அடிப்படையில்)
இராஜீவ்காந்தி கிராம மின் மயமாக்கல் திட்டம் :

  இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமத்திற்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இராஜீவ்காந்தி கிராம எல்.பி.ஜி.விட்ராக் திட்டத்தின் கீழ் 16 கோடி சமையல் எரிவாயு இணைப்பு :

   2015 க்குள் 75% இந்திய குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு எல்.பி.ஜி. சிலிண்டருக்கும் மத்திய அரசு 224 ரூபார் 38 பைசா மானியமாக வழங்குகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு :
  நாடு முழுவதும் 25 லட்சம் அரசு ஊழியர்களைக் கொண்டு பிப்ரவரி 2011க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடிக்கப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து நாட்டு மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும் நிதி ஒதுக்கி திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தொலைதொடர்பு இணைப்பு :

   60 கோடி தொலைபேசி இணைப்புகள் என்ற அளவில் உலகிலேயே 2வது பெரிய தொலைபேசி நெட்வொர்க் உள்ள நாடாக இந்தியா உள்ளது. தற்போது மாதந்தோறும் 2 கோடி இணைப்புகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் உலகிலேயே முதல் இட்த்தில் இருக்கிறோம். உலகில் மூன்றில் ஒரு பங்கினர் சாதாரண சேவை கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அகல ரயில்பாதை திட்டம் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள் அமைத்தல் :
  நாடு முழுவதும் 800 கி.மீ. தொலைவிற்கு மீட்டர்கேஜ் பாதைகள் அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்:
   மத்திய மாநில அரசுகளின் எத்தகைய செயல்பாடுகளை பற்றியும் ஒரு சாதனை இந்திய குடிமகனும் தகவல் அறிய வழிவகுக்கும் சட்டம்.


மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் :
  உள்ளாட்சியில் இதுவரையிலும் 33 சதவீதம் பெண்களுக்கான பொறுப்புகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல் வரும் உள்ளாட்சி தேர்தல்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழித்திடும் சட்டம்:
   குடும்பத்திலிருக்கும் விதவை மற்றும் அபலைப் பெண்களுக்கு அவர்களது உறவினர்களால் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ வன்முறை ஏற்படுத்தினால் இச்சட்டத்தின் மூலம் தடுத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.


காடுகளில் வாழ்வோர் மற்றும் பழங்குடியினருக்கு நில உடமை சட்டம்:
  காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு அவர்களது நில உடமைகளை அவர்களுக்கே உரித்தாக்கிடும் சட்டம். இதை மாநில அரசுகள் தான் செய்லபடுத்திட வேண்டும்.


எரிசக்தி தன்னிறைவு சட்டம் :
   உலக நாடுகளில் அணுசக்தி விநியோகம் செய்யும் 45 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து எரிசக்தியில் தன்னிறைவு அடைவதே இச்சட்டத்தின் நோக்கம். இது வரையில் இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், கனடா, வெனிசுலா, அர்ஜெண்டினா, நைஜீரியா, கஜகஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.


நலிந்த விவசாயிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி:
 இந்தியா முழுவதும் 4 கோடி விவசாயிகள் பெற்ற வங்கிக்கடன் ரூ.67 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது.


பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்:
  நமது பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்கள் ஆகஸ்ட் 15, 2007 அன்று அறிவித்த இந்த திட்டம் ஒரு மத்திய அரசு திட்டமாகும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அளிக்கவே இது உருவானது. தற்போது 26 மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை தொடங்கிவிட்டன. இதுவரை 1,61,25,560 காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.


அரிசிக்கு மத்திய அரசு மானுயம் ( அந்த்யோதியா அண்ண யோஜனா திட்டம்) (AAY)
   இத்திட்டத்தின் மூலம் ரூ.17.90 மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ரூபாய் மூன்றிற்கு வழங்குகிறது. இதில் மத்திய அரசு மானியம் ஒரு கிலோவிற்கு 14.90 பைசா அளிக்கிறது.


அரிசிக்கு மத்திய மானியம் (வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு) (BPL)
  இத்திட்டத்தின் மூலம் ரூ.17.90 மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ரூ. 5.56 க்கு வழங்குகிறது. இதில் மத்திய அரசு மானியம் ஒரு கிலோவிற்கு ரூ. 9.60 பைசா அளிக்கிறது.


மண்ணென்ணைக்கு மத்திய அரசு மானியம்:
 இத்திட்டத்தின் மூலம் ரூ.30 மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ரு.8.30 க்கு வழங்குகிறது. இதில் மத்திய அரசு மானியம் 1 லிட்டருக்கு ரூ.18 அளிக்கிறது.

டீசலுக்குமத்திய அரசு மானியம்
   ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.30 மானியமாக மத்திய அரசு வழங்குகின்றது.


பாரத் நிர்மான் ராஜீவ்காந்தி சேவை மையங்கள்(BNRGSK)
    இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் வட்டாரங்களிலும் சேவை மையங்கள் கட்டப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGS) கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து அல்லது வட்டாரங்களிலும் இத்திட்டத்தின்படி சேவை மையக் கட்டிடத்தை கட்ட அதிகபட்சமாக முறையே ரூ.25 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் தரப்படும். இதம் மூலம் கிராம பஞ்சாயத்து அல்லது வட்டாரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள்  தாங்கள் உரிமையை புரிந்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ள வழி வகுக்கின்றது.


இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம்:
  இத்திட்டத்தின் மூலம் 40 வயதிலிருந்து 64 வயதுக்குள் இருக்கும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.200 மத்திய அரசு  வழங்குகின்றது.


தாய் நலத்திட்டம் (JSY) :
        JSY 100% மத்திய அரசால் வழங்கப்படும் திட்டமாகும். பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நிதி உதவி அளிப்பது, பிரசவத்தின் போது ஒரு சுகாதர நிலையத்தில் அரவணைப்பு அளிப்பது போன்ற உதவிகள் செய்வது வருகிறது. இதற்காக பகுதி வாரியாக சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். (JSY)-ன் முக்கிய நோக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களில் ஒட்டுமொத்த தாய் இறப்பு விகிதாச்சாரம் மற்றும் நோய் இறப்பு விகிதத்தை குறைத்து மருத்துவமனை பிரசவங்களை அதிகப்படுத்துவதாகும்  இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களை சேர்ந்த அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் மற்றும் 19 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கும் வரை பயன் பெறலாம். 2009-2010ம் ஆண்டில் (டிசம்பர் 2009 வரை) 78 லட்ச்த்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் இத்திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பான பிரசவத்திற்காக சுகாதார அமைப்புகளை தேடி வருகின்றனர். தாய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கணினி மயமாக்கப்பட்ட ஆளுகை (மின் ஆளுகை)
  2009-10ல் மேலும் 39,615 பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. பிறப்பு சான்றிதழ்கள், இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் வழங்குவது மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சார்ந்த சேவைகள், பயன்பாடு கட்டணம் வசூலிப்பது. வேலைவாய்ப்பு அலுவலக சேவைகள். தபால் சேவைகள், தேர்தல் எண் பதிவு, தகவல் அறியும் உரிமை சேவைகள், உரிமைகளின் ஆவணம், கணினி வாசல் மூலம் ஒருமைப்பாடு மற்றும் நிர்வாகத் தகவல் முறை. தேசிய கிராம சுகாதார திட்டம் பற்றிய விழிப்புணர்வு சேவைகள், விபத்து மேலாண்மை.
       (AIDS) கட்டுப்பாடு மற்றும் தொழுநோய் மருந்துகள் ஆகிய அனைத்து விஷயங்களும் இந்த மையங்களின் மூலம் கிடைக்கும். மீதமுள்ள 12 இந்திய மொழிகளிலும் கணினி எழுத்துக்கள் மற்றும் கருவிகள் உருவாக்கப்பட்டன். உத்திரப்பிரதேசம், அசாம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மாவட்டங்களின் கணினி மயமாக்கப்பட்ட மாவட்ட சோதனை செய்ல் திட்டங்கள் ஏவப்பட்டன. படிப்படியாக அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை இணைத்து கணினி முறையில் கண்காணிக்கப்படும்.

நாடு முழுவதும் 35 மாநிலங்களில், 640 மாவட்டங்களில் உள்ள 5,767 தாலுக்கக்கள், 7742 நகரங்கள், 6,08,786 கிராமங்கள், 24 கோடி வீடுகள் கொண்ட 100 கோடியே 20 லட்சம் மக்களை உள்ளடங்கிய இந்தியாவிற்கு செலவிடப்படும் தொகையை மத்திய அரசே நேரடியாக செய்ய முடியாது என்பதற்காக மாநில அரசுகளுக்கு துறைவாரியாக நிதியை பிரித்து கொடுத்து நாட்டு மக்களுக்கு சென்றடைய செய்கின்றனர்.

No comments: