Search This Blog

Wednesday, August 25, 2010

அரசியலில் மிகப்பெரிய தலைவராக விஜயகாந்த் வருவார் : இளங்கோவன்

தமிழக அரசியலில் மிகப்பெரிய தலைவராக விஜயகாந்த் வருவார்,'' என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று 58வது பிறந்த நாள். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு காலை 9.45 மணியளவில் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார்.விஜயகாந்துடன் 10 நிமிடம் பேசித் திரும்பிய இளங்கோவன், நிருபர்களிடம் கூறுகையில், ""எதிர்வரும் காலத்தில் தமிழக அரசியலில் விஜயகாந்த் மிகப்பெரிய தலைவராக வருவார். அவரது கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது,'' என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இந்திய கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ஆரூண் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக மதியம் வரை காத்திருந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விஜயகாந்தை நேரடியாக சந்தித்து இளங்கோவன் வாழ்த்து தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் ஆர்வமாக பேசப்படுகிறது.

No comments: