Search This Blog

Thursday, August 5, 2010

தொகுதி வளர்ச்சி நிதியை செலவிடுவதில் யாருக்கும் அக்கறையில்லை

நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்துவதில் மதுரை தொகுதி உறுப்பினரும், மத்திய ரசாயணத்துறை அமைச்சருமான மு.க.அழகிரி முதலிடத்தில் உள்ளார்.

மாநில அளவில் எம்.எல்.ஏ தொகுதி வளர்ச்சி நிதியை மாநில அரசுகள் வழங்குகின்றன. இதேபோல தேசிய அளவில் எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியை ஒவ்வொரு எம்.பிக்கும் மத்திய அரசு [^] ஒதுக்குகிறது. ஒவ்வொரு எம்.பிக்கும் ஆண்டுக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதை பலர் தங்களது தொகுதி பணிகளுக்காக ஒதுக்கி செலவிடுகின்றனர். சிலரோ இதை தொட்டுக் கூட பார்ப்பதில்லை.

இந்தத் தொகுதி நிதி மூலம் ஒவ்வொரு எம்.பிக்கும் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தின்போது ரூ. 10 கோடி கிடைக்கும். இதை வைத்து பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஆனால் இதை செலவிடக் கூட நேரம் இல்லாமல் பல எம்.பிக்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 545 எம்.பி.க்களில் 130 எம்.பி.க்கள் 2 கோடி ரூபாயிலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கவில்லையாம்.

ஆனால் இதை செலவிடுவதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார் அழகிரி. மதுரை தொகுதி எம்.பியான அழகிரி, கடந்த 14 மாதங்களில் மொத்தம் உள்ள ரூ.2 கோடியில் ரூ.1 கோடியே 24 லட்சம் செலவிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளில் அதிக நலத்திட்ட உதவிகளை பெற்ற தொகுதியாக மதுரை மாறியுள்ளது.

அழகிரிக்கு அடுத்தப்படியாக சபாநாயகர் மீராகுமார் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாயை தன் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ரூ.1 கோடியே 9 லட்சமும் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ரூ.1 கோடியும் செலவிட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ரூ.2 கோடி பணத்தில் 97 லட்சம் ரூபாயை தன் தொகுதி மேம்பாட்டுக்காக கொடுத்துள்ளார். மற்ற எம்.பி.க்கள் சில லட்சம் பணத்தையே தங்கள் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளனர்.

அதாவது அழகிரி, ப.சிதம்பரத்தைத் தவிர தமிழகத்தைச் சேர்ந்த பிற எம்.பிக்கள் இந்த நிதியை சரிவர பயன்படுத்தவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.

ஒரு பைசா கூட செலவழிக்காத சோனியா-அத்வானி

ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாதிக்கு பாதி எம்.பி.க்கள் ஒரு பைசா கூட எடுத்து செலவழிக்க வில்லை. அவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி [^], பா.ஜ.க. தலைவர் அத்வானி, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவும் அடங்குவார்கள்.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி [^], ஊரக மேம்பாட்டு அமைச்சர் ஜோதி, ஐக்கிய ஜனதா தளம் [^] தலைவர் சரத்யாதவ், குமாரசாமி ஆகியோரும் ரூ.2 கோடியில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து தொகுதி மேம்பாட்டுக்காக கொடுக்கவில்லை.

அரசாங்கமே வலியக்க வந்து பணத்தைக் கொடுத்தும், அதை கூட தொகுதி மக்களுக்காக செலவிட மனம் வராத இவர்களெல்லாம்... என்னத்தைச் சொல்வது...!

No comments: