Search This Blog

Friday, July 16, 2010

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி


தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து ராகுல் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நிலையில், தமிழகத்தின் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ள ராகுல், மாநிலத்தில் அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி சாதக, பாதகங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், தி.மு.க., தலைமை நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. இருப்பினும், சோனியாவின் மகனும் அக்கட்சியின் எதிர்காலத் தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல், தமிழகத்துக்கு எப்போது வந்தாலும் தி.மு.க., தலைவரை சந்திக்காமல் சென்று விடுவது முக்கியமாக பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருசிலர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கே அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தியுள்ளார். நம்பர் 12, துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களும் இந்த சந்திப்பு நடந்தது. ராகுலை சந்தித்தவர்களில் விடியல் சேகர், அருள் அன்பரசு, காயத்ரிதேவி, ராஜ்குமார், ராம்பிரபு, விஷ்ணுபிரசாத் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் முக்கியமானவர்கள். இதுதவிர கார்த்தி சிதம்பரமும் சந்தித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காஞ்சிபுரம் புரு÷ஷாத்தமன், தூத்துக்குடி பெருமாள் உள்ளிட்ட மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுலை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராகுலை தனித்தனியே சந்தித்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டது.

ராகுலை சந்திப்பதற்கு முன்பாக ஒவ்வொருக்கும் ஒரு விண்ணப்பம் தரப்பட் டது. அந்த விண்ணப் பத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. "நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள், கட்சியில் உங்களது பணி எந்த அளவில் பேசப்படுகிறது, சமூகதளத்தில் உங்களது பங்களிப்பு என்ன, நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காணப்பட்ட நிறை குறைகள் என்ன, உங்களுக்கு மீண்டும் தேர்தலில் சீட் தந்தால் ஜெயிப்பீர்களா, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள், உங்கள் தொகுதி எஸ்.பி., - கலெக்டர் ஆகியோர் பெயர் என்ன?' என்பன போன்ற கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகே, ராகுலை சந்தித்துள்ளனர். ராகுலுடன் நடந்த சந்திப்பின்போது, ஜிதின் பிரசாதா மற்றும் கனிஷ்கா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வேறு வேறுவிதமான விஷயங்களை ராகுல் பேசியதாக தெரிகிறது. ஒருசிலரிடம் தமிழக அரசியல் நிலவரமும், இன்னும் சிலரிடம் கட்சி நடவடிக்கைகள் குறித்தும், மேலும் சிலரிடம் கூட்டணி மற்றும் மக்களின் மனநிலை ஆகியவை குறித்த கருத்துக் களை ராகுல் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தவிர, மாநில காங்கிரஸ் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றியும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார். மற்ற மாநிலங்கள் போல் அல்லாது தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்தாக வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைத்தால் தமிழகத்தில் அது எந்த அளவில் எடுபடும் என்றும் முக்கியமாக பேசப்பட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் வேளையான தற்போது, ராகுல் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

No comments: