Search This Blog

Thursday, July 8, 2010

“காமராஜர் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடுங்கள்” காங்கிரஸ் தொண்டர்களுக்கு தங்கபாலு வேண்டுகோள்


தமிழகத்தின் காரிருள் நீக்க வந்தப்பேரொளி, பாரதத்தின் தவப்புதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 108-வது பிறந்தநாள் வருகிற 15-ந்தேதி என்பதை அறிவீர்கள்.
 
நாட்டின் விடுதலைப்போர்க்களத்தில் தனது வீரஞ் செறிந்த பங்களிப்பால் தியா கச்சுடரென வரலாற்றில் தனி அத்தியாயமாய் உருவாகிப்புகழ் பெற்றவர். 9 ஆண்டு கால சிறைக்கொடுமைகளை- ஈடேதுமில்லாத கேடுகளை அன்னியர் ஆட்சியில் அன்னை நாட்டின் மீட்புக்காக அனுபவித்தவர்.
 
விடுதலைக்குப்பின் 9 ஆண்டுகால தமிழகத்தின் முதல்-அமைச்சராய் கல்விப் புரட்சிக்கு வித்திட்டு, ஆறுகளில் பல அணைகளைக்கட்டி விவசாயத்தை மேம் படுத்தி, சிறிய, பெரிய தொழில்வளத்தைப் பெருக்கி, சாலைகள் அமைத்து எண்ணற்ற சாதனைகள் பலப்பல புரிந்து சரித்திரத்தில் இடம் பெற்ற மாபெரும் தலைவர் அவர்.
 
தமிழக ஆட்சி நிர்வாகத் தில் புனிதத்தையும், கட்சிப்பணிகளில் மகத்துவத்தையும் உருவாக்கி வெற்றி கண்டதால் பாரதத்தின் உன்ன தப்பொறுப்புக்கு உயர்த்தப்பட்டு போற்றப்பட்டார். சோதனையான காலங்களில் பாரதத்தின் உயர்வு கருதி இரு பிரதமர்களை தேர்வு செய்த அரசியல் சாணக்கியத்துவத் தின் மூலம் தனது ஆற்றல்மிகு பெருமையை உலகறியச் செய்தார்.
 
ஏழ்மையில் பிறந்தவர். தான் ஆற்றிய தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் சுகம் காணாமல் ஏழைகள் உயர வழி காணவும், தமிழகம் வளர வகைகள் தேடவும், பாரதம் மிளிர பணிகள் செய்யவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித் துக்கொண்ட வரலாற்று நாயகர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் என்று அரசு சார்பில் அனைத்துப்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. நன்னாளில் அனைத்து சிறப்புகளோடும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் அவரவர் பகுதிகளில் பெருந்தலைவ ரின் பிறந்தநாள் விழாவை மக்கள் திருநாளாகக் கொண்டாட வேண்டும்.

No comments: