Search This Blog

Wednesday, July 21, 2010

ஊழல் அரசியல்வாதிகள் - திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

பீகாரி 11 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த போது 900 ஆயிரம் கோடிக்கு மாட்டுத் தீவன ஊழல் நடைபெற்றது அது போல 11 மடங்கு ஊழல் நடந்துள்ளதாக எதிர்கள் புகார் தெரிவித்தும் போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.


முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 67 பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பீகாரில், 2002-03 மற்றும் 2007-08ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களில் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  இதனால், முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  மைக்குகளை உடைத்ததோடு, மேஜை, நாற்காலிகளையும் சேதப்படுத்தினர். ஒரு கட்டத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், சபையை நாள் முழுவதற்கும் சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி ஒத்திவைத்தார். கர்நாடகாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது போல, பீகார் சட்டசபையிலும், சட்டசபை மேலவையிலும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். இரவு முழுவதும் சட்டசபையிலேயே தங்கியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை பீகார் சட்டசபை கூடியதும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இ.கம்யூ., (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.  கருவூலகங்களில் இருந்து முறைகேடாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவில்  பணம் பெறப்பட்டதால், அதற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். சபையின் மையத்தில் அமர்ந்தபடி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு திரும்பும்படி சபாநாயகர் விடுத்த வேண்டுகோளையும் புறக் கணித்தனர். 

இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட 67 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை சபையில் பார்லிமென்டரி விவகார அமைச்சர் பிரிஜேந்திர பிரசாத் யாதவ் கொண்டு வந்தார்.  அது எதிர்க்கட்சிகளின் பலத்த அமளி, எதிர்ப்புக்கு இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. சட்டசபையின் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடர் முடியும் வரை அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்டான 67 எம்.எல்.ஏ.,க்களில் 42 பேர் ராஷ்டிரிய ஜனதா தளத்தையும், 11 பேர் லோக்ஜனசக்தி கட்சியையும், மீதமுள்ளவர்கள் மற்ற கட்சிகளையும் சேர்ந்தவர்கள். பின், அவர்கள் சபைக் காவலர்கள் மூலம் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்படும் போது, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஆர்.சி.பஸ்வான் என்ற எம்.எல்.ஏ., சபையின் வாயிலில் மயங்கி விழுந்தார். உடன் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன்பின் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ., பப்லு தேவை சபைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது, மற்ற உறுப்பினர்கள் தடுக்க முற்பட்டனர்.  இந்த மல்லுக்கட்டின் போது, சபாநாயகரின் இருக்கையை நோக்கி செருப்பு ஒன்றும் வீசப்பட்டது.  செருப்பை யார் வீசியது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்தச் செருப்பு, சபாநாயகர் மீது படவில்லை. இதேபோல், பீகார் சட்டசபை மேலவைக்கு வெளியேயும் பெரும் அமளி மற்றும் நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை பெண் காவலர்கள் சில அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று விட்டனர். சபையின் வெளியேதான் இந்த நிலைமை என்றால், உள்ளேயும் கடும் அமளி நிலவியது. ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி., சஞ்சய் பிரசாத், மேஜை மீதிருந்த மைக்குகளை பிடுங்கி ஆளும் கட்சியினரை நோக்கி எறிந்தார்.  சட்டசபை மேலவையில் ரகளையில் ஈடுபட்டதற்காக நேற்று முன்தினமே 14 எம்.எல்.சி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற அரசியல்வாதிகளை மக்களால் திருத்த முடியாது. ஏன்றால் அரசியல்வாதிகளிடமும் பெரும் தொழில் அதிபர்களிடமும் தான் பணம் நிறைய உள்ளது அவர்கள் தான் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் நிர்ணியிக்கும் சக்தி அதனால் திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

No comments: