Search This Blog

Wednesday, July 14, 2010

35 லட்சம் ஏழைகளுக்கு இலவச “கியாஸ்” இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்

வீடுகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்க ரூ.1250 டெபாசிட் கட்டணம் ரூ.150 ரெகுலேட்டர் கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும்.
 
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இந்த தொகையை மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஏழைகள் டெபாசிட் பணம் ஏதும் கட்டாமலேயே இலவச இணைப்பு பெறலாம்.
 
முதற்கட்டமாக 35 லட்சம் ஏழைகளுக்கு மானிய விலையில் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.490 கோடி செலவாகும்.
 
இது தொடர்பாக மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா கூறியதாவது:-
 
ராஜீவ் காந்தி கிராம கியாஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் கியாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக 35 லட்சம் இணைப்பு வழங்கப்படும். பின்னர் இதை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம்.
 
தற்போது நகரம் மற்றும் சிறு நகர பகுதிகளிலேயே கியாஸ் இணைப்புகள் கிடைக்கின்றன. கிராம பகுதிகளிலும் இணைப்பு கிடைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

No comments: