Search This Blog

Sunday, July 18, 2010

25 கிலோ இலவச அரிசி திட்டம் அமைச்சர் சிதம்பரம்

றுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதந்தோறும் 25 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி ஒன்றியத்தில் சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்.

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், ஏழை மாணவர்களுக்கு கல்வி கடனுதவி, விவசாயிகளுக்கு மானியத்தில் கடன் வழங்குதல், "108' ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு நிதியுதவி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதந்தோறும் 25 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மத்திய அரசுக்கு, மாநில அரசு ஆதரவாக இருக்கிறது; தொடர்ந்து இந்த ஆதரவு இருக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள், விவசாயிகளுக்கும் பல்வேறு சலுகைகள், திட்டங்களை சிறப்பாக வழங்க முடியும் என்றார்ச்.

No comments: