Search This Blog

Tuesday, June 5, 2012

போதிய நிதி இல்லாமல், சிந்துவெளி ஆய்வுகள் தேங்கும் நிலை ஏற்பட்டு, ஆய்வாளர்கள் கவலை அடைந்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே

சிந்துவெளி ஆராய்ச்சியில் கிடைத்த முத்திரைகள் அனைத்தையும் தொகுத்து, அவற்றின் குறியீடுகளை ஆய்வு செய்து, 1977ல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நூல் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 1977க்குப் பின் கிடைத்த முத்திரைகளைத் தொகுத்து, அவற்றின் புகைப்படங்கள் அடங்கிய நூல் ஒன்றை 2010ல், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா வெளியிட்டார்.உறுதி செய்யப்பட்டுள்ளதுதமிழகத்தில் கோவை மாவட்டம் சூலூர், செங்கல்பட்டு அருகே உள்ள சாணுர், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள செம்பியன் கண்டியூர் ஆகிய ஊர்களில், சிந்துவெளி காலத்தோடு ஒப்பிடக்கூடிய பொருள், அகழாய்வு மூலம் கிடைத்துள்ளது. இதுவரையில் நடந்த ஆராய்ச்சியின் மூலம், சிந்து வெளியில் திராவிடப் பண்பாடு தான் நிலவியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி தொடர வேண்டும். பல உண்மை விவரங்கள் வெளி உலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, திராவிட நாகரிகத்தின் அசைக்க முடியாத ஆதாரங்கள் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு, நிதி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் சிந்துவெளி ஆராய்ச்சிக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: