Search This Blog

Thursday, July 1, 2010

தமிழில் கையெழுத்து

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இளைஞர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கவும், காப் பாற்றவும் பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை பல்கலைக் கழகம் முதற்கட்டமாக சில முயற்சிகளை மேற்கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டது.இன்று முதல் சென்னை பல்கலை வளாகங்களின் பெயர் தமிழில் மாற்றப்படும். சேப்பாக் கம் வளாகம் தொல்காப்பியர் வளாகம் எனவும், மெரீனா வளாகம் பரிதிமாற் கலைஞர் எனவும், தரமணி வளாகம் மறைமலையடிகள் எனவும், சேத்துப் பட்டு வளாகம் சேக்கிழார் எனவும், மதுரவாயல் வளாகம் கம்பர் எனவும், கிண்டி வளாகம் பாரதியார் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும். பிஎச்.டி., ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்துடன், தமிழிலும் மொழி பெயர்த்து சமர்ப் பித்தால், மொழி பெயர்ப்பிற்காக 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். துணைவேந்தர் தலைமையில் ஐந்து பேர் குழு, தமிழ் மொழிபெயர்ப்பை பரிசீலித்து இந்த உதவித் தொகையை வழங்கும்.

செம்மொழித் தமிழ் வழி ஆராய்ச்சி உதவித் தொகை புதிதாக உருவாக்கப்படுகிறது. இதில் பிஎச்.டி., ஆராய்ச்சியை தமிழில் மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுதோறும் அறிவியல் பாடத் தில் 15 பேருக்கும், கலைப் பாடத் தில் 10 பேருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பை இந்த ஆண்டு துவங்க விரும்பினாலும், அக்கல்லூரிகளுக்கு உடனடியாக ஆய்வு நடத்தி அனுமதி வழங்கப்படும். கல்லூரிகளில் வழங்கப்படும் படிப் பிற்கு பல்கலைக் கழக இணைப்பு பெற, இரண்டு லட்சம் ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். தமிழ் வழி படிப்புகளுக்கு இணைப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். சென்னை பல்கலைக் கழக ஆட்சி மொழியான தமிழை, நிர் வாகத்திலும் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 5ம் தேதி முதல் சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தமிழில் கையெழுத்திட வேண் டும். தமிழ் மொழியில் கையெழுத்திடாத கோப்புகளை, துணைவேந்தர் பரிசீலிக்க மாட்டார். தமிழை தாய்மொழியாகக் கொள் ளாதவர்களும், தமிழில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப் படுவர். செப்., 15ம் தேதிக்குள், அனைத்து துறைகளுக்கும் தமிழ் மொழி மென்பொருள் வழங்கப்படும். அதற்கு முன், தேவையான பயிற்சி கொடுக்கப்படும். ஆவணங்களும், கோப்புகளும் முழுமையாக தமிழ் மொழியில் உருவாக்கப்படும். "தமிழ் லெக்சிகன்' முதல் தொகுதி வரும் டிசம்பருக்கும் வெளியிடப்படும். தமிழ் டிக்ஷனரியில் இடம் பெறாத புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ் ஆர்வலர்கள் புதிய தமிழ் வார்த்தைகளை, "tamilwordcorpus.unom@gmail.com' என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். சென்னை பல்கலை இணையதளத்தை தமிழ் மொழியிலும் உருவாக்க முயற்சி மேற்கொள் ளப்படும். இவ்வாறு திருவாசகம் கூறினார். முன்னதாக, சென்னை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனந்தகிருஷ்ணனை, துணைவேந்தர் திருவாசகம் பாராட்டினார்.

சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், இம்மாதம் 5ம் தேதி முதல் தமிழ் மொழியில் கையெழுத்து போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ராவணன்

கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தி ஊரையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் விக்ரம். ஒரே தங்கை பிரியாமணி உயர் சாதி இளைஞனை காதலிக்கிறார். இரு குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்கையில் மண மேடையில் அசம்பாவிதம். என் கவுண்டர் போலீஸ் சூப்பிரண்டு பிருதிவிராஜ் மண்டபத்தில் புகுந்து விக்ரமை சுடுகிறார். பிரியாமணியை போலீசார் இழுத்து சென்று கற்பழிக்கின்றனர். அவமானத்தில் அவர் தற்கொலை செய்கிறார்.

பழிதீர்க்க பிருதிவிராஜ் மனைவி ஐஸ்வர்ராயை விக்ரம் கடத்தி காட்டுக்குள் வைக்கிறார். அவரை மீட்க போலீஸ் படையுடன் பிருதிவிராஜ் காட்டில் நுழைகிறார். அங்கு இருவருக்கும் நடக்கும் யுத்தமும் ஐஸ்வர்யாராய் மீட்கப்பட்டாரா என்பதும் கிளைமாக்ஸ்.

முரட்டுத்தனமாக இருவருக்குள் நடக்கும் மோதலில் கவித்துவமான காதலை வைத்து இதயங்களை கனக்க செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

போலீசாரை விக்ரம் உயிரோடு எரித்து கொல்வது போல் எதிர்பார்ப்போடு கதை ஆரம்பிக்கிறது. படகில் செல்லும் ஐஸ்வர்யாராயை கடத்தியதும் சூடு பிடிக்கிறது. பிறகு போலீஸ் சேசிங் சண்டை என நீள்கிறது.

கட்டுமஸ்தான முரடனுக்குள் விக்ரம் வாழ்கிறார். டப டப வென்ற கூச்சலுடன் மண்டையில் அடித்து எதிரிகளை ஆவேசமாக துவம்சம் செய்கையிலும் ஐஸ்வர்யாராயை கை கால்கள் கட்டி இம்சிப்பதிலும் அசல் ராவணனாகவே தெரிகிறார். ஐஸ்வர்யாராயை சுட்டுக் கொல்ல துணிவது திக்.

ஐஸ் அழகில் கிறங்குவது அவரை தொடாமலேயே ரசிப்பது அழுத்தமானவை. காட்டில் என்னுடனேயே இருந்து விடுகிறாயா என கேட்கும் ஏக்கமும் பிருதிவிராஜ் மேல் காட்டும் பொறாமையும் நடிப்பில் உச்சம் தொடுபவை...

சந்தேகித்த கணவனை உதறி விட்டு ஐஸ்வர்யாராய் காட்டுக்குள் திரும்பி வந்ததை பார்த்து உருகுவதில் உயிரைத் தொடுகிறார். அப்போது இருவருக்கும் நடக்கும் வசன உரையாடல் ஜீவன். தொங்கு பாலத்தில் பிருதிவிராஜுடன் மோதும் சண்டை காட்சி சீட் நுணிக்கு இழுக்கிறது.

ஐஸ்வர்யாராய், அழகிலும் விக்ரமுடன் போட்டி போடும் நடிப்பிலும் ஜொலிக்கிறார். மழையில் சகதி காட்டில் எதிரிகளிடம் சிக்கி ஜீவமரண போராட்டம் நடத்துகிறார். குழிகள், குகைகள் சறுக்கு பாறைகளில் ஏறி இறங்கி நிறைய மெனக்கட்டுள்ளார். கணவன் சந்தேகத்தில் உடைவதும் விக்ரமுக்குள் ராமன் இருப்பதை உணர்ந்து காப்பாற்ற துடிப்பதும் வலுவானவை..

பிருதிவிராஜ் மிடுக்கான வில்லன் போலீஸ். விக்ரம் அண்ணனாக பிரபு, தங்கையாக பிரியாமணி, தம்பியாக முன்னா வலுவான கேரக்டர்கள். வன ஊழியராக வரும் கார்த்திக் கலகலப்பு.... ராசாத்தி என்ற அரவாணியாக வையாபுரி வருகிறார்.

ஏ.ஆர். ரகுமான் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் நீர் வீழ்ச்சி, பசுமைகளை அள்ளி கண்களில்அப்பும் சந்தோஷ் சிவன், மணிகண்டன் ஒளிப்பதிவும் தூக்கி நிறுத்துகின்றன.

விக்ரமின் கட்ட பஞ்சாயத்துகளும் அங்கு வசிக்கும் மக்களும் வட இந்திய சாயலில் தமிழுக்கு அன்னியப்படுகின்றனர். ஆரம்ப சீன்கள் பிரமாண்டத்துக்குள் மெதுவாய் நகர்கிறது. ஆனாலும் இடைவேளைக்கு பிறகு வரும் விறு விறுப்பும் முத்திரை பதிக்கும் கிளைமாக்சும் குறைகளை மறக்கடிக்க செய்கின்றன.